ஷேவாக்கை சேர்க்க அரியானா அணி மறுப்பு

ஷேவாக்கை சேர்க்க மாட்டோம் என்று அரியானா அணி கூறியுள்ளது. உள்ளூர் போட்டியில் டெல்லி அணி சார்பில் விளையாடி வந்த ஷேவாக் இப்போது டெல்லி அணி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அவர் அந்த அணியில் இருந்து விலகி அரியானா அணியில் சேரப்போவதாக அறிவித்து உள்ளார்.

ஆனால் அரியானா அணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி அணியில் இருந்து அவர் தடையில்லா சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்று அரியானா சங்கம் கூறியுள்ளது.

இது குறித்து அரியானா சங்கத்தின் தலைவர் அரவிந்த் சவுத்திரி கூறியதாவது:-

ஷேவாக் போன்ற முன்னணி வீரர்கள் எங்கள் அணியில் சேருவதை அரியானா மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அவரை சேர்த்து கொள்வதில் சில பிரச்சினைகள் உள்ளன. சாதாரண சூழ்நிலையில் அவர் வருவதாக இருந்தால் அவரை வரவேற்போம். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பவில்லை.

சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. முதலில் அவர் தடையில்லா சான்று பெற்று வரவேண்டும். இதற்காக அவர் டெல்லி சங்க தலைவர் அருண் ஜேட்லியிடம் பேசி அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியானா கிரிக்கெட் சங்க செயலாளர் அனிருத் மகேந்திரா கூறும் போது, ஷேவாக் தொடர்ந்து டெல்லி அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காண்பார்கள் என்று கருதுகிறேன். ஷேவாக் அரியானா அணிக்காக விளையாட விரும்பினால் அதை வரவேற்போம் என்றார்.

0 comments:

Post a Comment