சானியா ஜோடி முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிரான்சஸ்கா ஷியவோனே ஜோடி முன்னேறியுள்ளது.அமெரிக்காவில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.

இதன் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, இத்தாலியின் ஷியவோனே ஜோடி, உக்ரைனின் மரியா கோரிட்சேவா, பெலாரசின் டடியானா பவுட்சக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை கோரிட்சேவா ஜோடி 6-1 என கைப்பற்றியது.

இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட சானியா ஜோடி 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் "சூப்பர் டை-பிரேக்கர்' சுற்றில் இந்திய-இத்தாலி ஜோடி 10-6 என கைப்பற்றியது.

இறுதியில் சானியா-ஷியவோனே ஜோடி 1-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இதில் சானியா ஜோடி, ஜிம்பாப்வேயின் காரா பிளாக், அமெரிக்காவின் லிசெல் ஹியுபர் ஜோடியை எதிர்கொள்கிறது

0 comments:

Post a Comment