இந்தியா அபாரம்

இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றனர். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்ஹாமில் நேற்று நடந்தது.ஆட்டத்தின் துவக்கம் முதல் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆஷ்லே ஜாக்சன் 22வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னிலை தந்தார். இங்கிலாந்து வீரர் ஜான்டி கிளார்க் 26வது நிமிடத்தில் கோலடித்து 2-0 என வலுவான முன்னிலை தந்தார்.

தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 35வது நிமிடத்தில் அர்ஜுன் ஹலாப்பா 35வது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கை தந்தார். முதல் பாதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, தனன்ஜெய் மகாதிக் (41வது நிமிடம்), ராஜ்பால் சிங் (43வது நிமிடம்), குருவிந்தர் சிங் (65வது நிமிடம்) தலா ஒரு கோலடித்து 4-2 என முன்னிலை தந்தனர். இறுதிவரை போராடிய இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஜாக்சன் 69வது நிமிடத்தில் கோலடித்து ஆறுதல் தந்தார். இருப்பினும், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

0 comments:

Post a Comment