அரை இறுதியில் இந்தியா

சென்னையில் நடைபெறும் 13-வது உலக ஜூனியர் மகளிர் ஸ்குவாஷ் குழு போட்டியில் இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ள கணக்கில் கனடாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

முதல் போட்டியில் கனடாவின் சமந்தா கார்நெட் 11-6, 6-11, 11-8, 11-2 என்ற கணக்கில் இந்தியாவின் அன்வேஷா ரெட்டியை வென்றார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் 11-8, 11-3, 11-9 என்ற கணக்கில் லாரா ஜெம்மலைத் தோற்கடித்தார்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் சுரபி மிஸ்ரா 13-11, 11-8, 3-11, 11-6 என ஜெனீபர் பெல்லட்டியரை வென்று இந்திய அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் கால் இறுதியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதியில் ஹாங்காங்கை சந்திக்கிறது.

மற்றொரு அரை இறுதியில் எகிப்தும், அமெரிக்காவும் மோதுகின்றன.

0 comments:

Post a Comment