இந்திய ஜோடி சாம்பியன்

சீன தைபேயில் நடந்த "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையரில் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.

சீன தைபேயில் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு 2009' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி, இந்தோனேஷியாவின் ஹென்டிரா அப்ரிடா குணவான், விடா மரிசா ஜோடியை சந்தித்தது.

விறுவிறுப்பான பைனலில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 23-21, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் "கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு' பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.


ஜுவாலா கட்டா கூறுகையில், ""இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை என்னால் நம்பமுடியவில்லை. ஒருவேளை நாங்கள் நாடு திரும்பிய பின் இந்த வெற்றியின் மகத்துவத்தை உணர்வேன் என நினைக்கிறேன். நேற்றைய போட்டி எளிதானதாக அமையவில்லை.

எதிரணி யினர் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், நாங்கள் முழுதிறமையை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது,'' என்றார்

0 comments:

Post a Comment