மீண்டும் "ஈடன் கார்டன்' சாதனை
காமன்வெல்த்: குறைகளை சரிகட்டும் நேரம்
காமன்வெல்த் போட்டி: வீரர்களை மிரட்டிய பாம்பு
நிகரற்ற வீரர் சச்சின்
ஐ.சி.சி., விருதுகளை வைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை அளவிட முடியாது. அவர் நிகரற்ற வீரர்,'' என, யுவராஜ் தெரிவித்தார்.
கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளாக அசத்தி வருகிறார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (169 போட்டி, 13837 ரன்கள்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில் (442 போட்டி, 17598 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். பல்வேறு சாதனைகளை படைத்தும், இதுவரை "கிரிக்கெட் ஆஸ்கர்' என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருது இன்னும் பெற வில்லை.
இது குறித்து சக வீரர் யுவராஜ் சிங் கூறியது: ஐ.சி.சி., விருது களை அடிப்படையாக வைத்து சச்சினை எடை போட முடியாது. கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை சச்சின் படைத்து விட்டார். அவரை யாரோடும் ஒப்பிட முடியாது. சச்சினுக்கு நிகர் சச்சின் தான்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' அணியாக இந்தியா உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.
சச்சினுக்கு வாய்ப்பு:இதுவரை ஐ.சி.சி., விருது பெறாத சச்சின், இந்த ஆண்டு இப்பெருமை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் பரிந்துரை பட்டியலில் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. வரும் அக். 6 ம் தேதி பெங்களூருவில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் சச்சினுக்கு அதிக வாய்ப்பு உள்ளது
இந்திய அணிக்கு நெருக்கடி: கங்குலி
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் (2011), இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது, என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை (50 ஓவர்), இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தொடர் துவங்குகிறது. பைனல் போட்டி ஏப். 2 ல் நடக்கிறது.கடந்த 1983 ம் ஆண்டு உலககோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது.
அதற்குப் பின் நடந்த 6 உலககோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பை கைப்பற்ற வில்லை. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக இந்தியா கருதப்படுகிறது.
ஆனால் இது மிகவும் சிரமம் என்கிறார் முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி. இது குறித்து இவர் கூறியது: சொந்த மண்ணில் உலககோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு நெருக்கடி அதிகம். உள்நாட்டு ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, இந்திய அணி வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடியை எற்படுத்தும்.
இத்தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை கணிப்பது சிரமம். கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, யுவராஜ், காம்பிர் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் அணியின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. இருப்பினும் உலககோப்பைக்குள் அணியின் பந்து வீச்சு பலப்படும் என எதிர்பார்க்கிறேன்.
சச்சின் பலம்: இந்திய அணிக்கு சச்சின் தான் பலம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்த முறை இந்திய அணிக்கு அவர் உலககோப்பை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
சவாலான இந்திய தொடர்
வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், எப்போதுமே சவால் நிறைந்தது,'' என, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. வரும் 25ம் தேதி இந்திய பிரசிடென்ட் லெவன் அணியுடன், 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.
இத்தொடர் குறித்து ஜான்சன் கூறியது:இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் மற்றும் சேவக், பேட்டிங் வரிசையிலும், பவுலிங்கில் ஹர்பஜனும் வலு சேர்க்கின்றனர். இவர்களுக்கு எதிராக விளையாடுவதே, மிகவும் சவாலானது. மற்றபடி ரேங்கிங் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.
இளம் பவுலர்கள்: இம்முறை பீட்டர் ஜார்ஜ், ஜேம்ஸ் பட்டின்சன், மைக்கேல் ஸ்டிராக் என இளம் பவுலர்கள் வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான ஆலோசனைகளை அளித்து வருகின்றேன். இத்தொடரின் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள்.
வெற்றி உறுதி: இந்திய ஆடுகளங்களில் பந்து அதிகமாக "பவுன்ஸ்' ஆகாது. தவிர, வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்தது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை கொடுக்கும். இருந்தாலும் எப்படியும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெறுவோம் என உறுதியாக கூறுகிறேன்.
பாதுகாப்பு திருப்தி: இப்போதெல்லாம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என பலவித கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடைவெளியில், வீரர்களுக்கு அணி நிர்வாகம் ஓய்வு தரவேண்டும். தவிர, இந்தியாவில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு திருப்தி தருகிறது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். இவ்வாறு ஜான்சன் கூறினார்.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: வாரியர்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 137
ஐ.பி.எல். புதிய விதி தெண்டுல்கர் அதிருப்தி
ஐ.சி.சி., விருது: சச்சினுக்கு வாய்ப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெங்களூருவில் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் ஒன்பது வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் வீரர் என இரண்டு பிரிவுகளில் சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் சச்சின் இடம் பெற்றுள்ளார். இவருக்கு ஏதாவது ஒரு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. கேப்டன் தோனி, இறுதி பட்டியலில் எந்த ஒரு விருதுக்கும் தேர்வு செய்யப்படவில்லை.
ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யுவராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில், புஜாராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஆட்டத்திறன் மற்றும் உடல்தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரர்கள் தேரவு செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் மொஹாலியில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது.
அணி வீரர்கள்:
எம்.எஸ். டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் தெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமன், ரெய்னா, ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, எம். விஜய், புஜாரா
சடுகுடு சக்கரவர்த்தி
கிரிக்கெட்டை சீர்குலைக்கும் சூதாட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர்...
21 ஆண்டுகள் அந்த அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ÷ஹுப்பர் கயானாவில் உள்ள பிரிட்ஜ்டவுனில் 1966-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் கயானா அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.
பின்னர் 1987-ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பிடித்தார்.1987-ம் ஆண்டு மார்ச்சில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார் ஹுப்பர். அதே ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் -இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஒரு நாள், டெஸ்ட் என இரண்டு போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். 2001-ல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 233 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் ஹுப்பரின் அதிகபட்ச ரன்களாகும். ஒரு நாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 133*.
இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியில் கென்ட், லங்காஷையர் அணிகளுக்காக விளையாடி உள்ள ஹுப்பர், கவுன்ட்டி கிரிக்கெட்டின் 18 அணிகளுக்கு எதிராகவும் சதமடித்தவர் என்ற பெருமைக் குரியவர்.
மேலும், 100 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் உரியவர் ஹுப்பர். பின்னர் இந்தச் சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜேக்கஸ் காலிஸ் சமன் செய்தார்.
முன் கள பீல்டிங்கில் அசைக்க முடியாதவராக விளங்கினார் கூப்பர். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில், தான் விளையாடிய காலங்களில் சிறந்து விளங்கிய பேட்ஸ்மேன்களில் கார்ல் ஹுப்பர் மறக்க முடியாதவர் என தெரிவித்தார்.
2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,762 ரன்களும், 277 ஒரு நாள் போட்டிகளில் 5,761 ரன்களும் எடுத்துள்ளார்.
இதில் 20 சதங்கள், 56 அரை சதங்கள் அடங்கும். ÷மொத்தம் 307 விக்கெட்டுகள், 235 கேட்சுகளையும் பிடித்துள்ளார் கார்ல் ஹுப்பர்
சூதாட்டத்தில் 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில், 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி.,யின் ஊழல் தடுப்பு பிரிவு தயாரித்த இந்த முறைகேடு பட்டியலில் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சில சூதாட்ட முறைகள் மர்மமான முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிக முறை "டக்' விக்கெட் எடுத்தவர்
அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்: சச்சின்
கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல், இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வருகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ள இவர், கோப்பை வெல்ல காத்திருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. தரமான போட்டிகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று திறமை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
சாம்பியன்ஸ் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதை விட இந்தியாவுக்காக விளையாடுவது தனிச் சிறப்பு. மும்பையும், இந்தியாவும் இணையும் போது, மும்பை இந்தியன்ஸ் உருவாகிறது. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் சிறந்தவர்
அதிக எதிர்பார்ப்பில் சச்சின்