கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது. இந்த தொடரை இழந்த 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் ஆவார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்தார். அதன்படி டெஸ்ட் போட்டிக்கு தானும் 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டிக்கு மைக்கேல் கிளார்க்கும் கேப்டனாக இருக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதை ஏற்க கிளார்க் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனக்கு கேப்டன் பதவியில் ஆர்வம் இல்லை. தற்போதுள்ள நிலையில் ஒரே ஒரு கேப்டன்தான் தேவை. பாண்டிங் தான் எனது கேப்டன். அவர் ஒரு சிறந்த கேப்டன்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி போராடுகிறோம். டெஸ்ட் தொடரை இழந்ததால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஒரு நாள் தொடரில் வெற்றி பெறுவோம். சாம்பியன் டிராபியில் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு கிளார்க் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment