போலீஸ்காரர் சுட்டதில் கிரிக்கெட் வீரர் தலையில் குண்டு பாய்ந்தது

பஞ்சாப்பை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் ராகுல் (வயது 20). இவர் லூதியானா பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு நின்ற பஸ் கண்டக்டருக்கும், மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் ஜிதேந்தர்சிங்குக்கும் இடையே டிக்கெட் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஜிதேந்தர்சிங் கண்டக்டரை பயமுறுத்துவதற்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மேலே நோக்கி சுட்டார்.

துப்பாக்கியால் சுட்டதில் அங்கு நின்று கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் ராகுல் தலையில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இதுதொடர்பாக போலீஸ்காரர் ஜிதேந்தர்சிங் கைது செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment