கிரிக்கெட்டின் எதிர்காலம்...

உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பரிமாணம்

கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.

காயம்காரணம்

கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமேவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.

பணம் முக்கியம்

இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.

நன்மை உண்டு

ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம்

பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்

ஹாக்கி டெஸ்ட் தொடர்: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி

திறனை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி குழு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 1-3 என தோல்வியைத் தழுவியது.

பர்மிங்காமில் புதன்கிழமை இரவு இடைவிடாத மழையினிடையே இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணியினரே ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து பெய்த மழை, இந்திய அணியினரின் திட்டத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.

பிற்பாதியில் கோல் அடிக்க சில நல்ல வாய்ப்புகளைப் இந்திய வீரர்கள் பெற்றனர். அதற்கு முன்கள வீரர்களும் தயாராக இருந்தனர். ஆனால், பின்கள வீரர்கள் பந்தை முறையாகத் தள்ளிக் கொடுக்கத் தவறினர்.

இங்கிலாந்து அணிக்காக பென் ஹாவெஸ் (1-வது நிமிடம்), பேரி மிடில்டான் (18), ரிச்சர்டு ஸ்மித் (68) ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்திய அணியில் தனஞ்செய் மகாதிக் 8-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அத்துடன் இந்தியா ஆறுதல் அடைந்தது.

முன்னதாக பர்மிங்காம் மேயர் இரு அணியினருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்

செய்னாவுக்கு "தட்டம்மை'

இந்திய பாட்மின்டன் வீராங்னை செய்னா நேவல், தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், செய்னா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ளார் பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல். ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண் டாட, அவருக்கு உடல் நலம் சரியில்லை. தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார் செய்னா. அடுத்த மாதம் ஐதராபாத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்க உள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் செய்னா, இத்தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்னா கூறியதாவது: கடந்த சனிக்கிழமை முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். ஆனால் நேற்று எனது தோள் பகுதிகளில் சிறிய கொப்பளங்கள் தோன்றின. ஆரம்பத்தில் நான் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பின் உடல் முழுவதும் கொப்பளங்கள் பரவி விட்டன. டாக்டரிடம் பரிசோதித்த போது, தட்டம்மை நோய் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர் ஆலோசனை அளித்துள்ளார். அடுத்த மாதம் சொந்த மண்ணில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் துவங்க உள்ள நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இருப்பினும் உலககோப்பையில் நான் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாது என கருதுகிறேன். தீவிர பயிற்சி செய்ய வேண்டிய காலத்தில், ஓய்வில் இருக்க வேண்டி உள்ளது. இருப்பினும் நான் கடந்த மாதம் முழுவதும் நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு செய்னா கூறினார்

ஊக்கமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள்: மறுப்பு குழப்பத்தில் பிசிசிஐ

ஊக்கமருந்து ஏஜென்ஸி வகுத்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் தயக்கம் காட்டுவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்பம் அடைந்துள்ளது.

இதையடுத்து அவசரக் கூட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் கூட்டியுள்ளது.

போட்டிகள் இல்லாத சமயத்திலும் வீரர்கள் தங்களது இருப்பிடத்தை ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை எங்கிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி கூறியுள்ளது. அந்த விதிமுறைகள் அடங்கிய படிவத்தில் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விதிமுறையால் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுவதாக இந்திய வீரர்கள் தெரிவித்து, கையெழுத்திட மறுத்து வருகின்றனர். இதனால் ஐசிசி விதித்துள்ள காலக் கெடுவுக்குள் படிவத்தை கொடுக்க முடியாத நிலையை பிசிசிஐ பெற்றுள்ளது.

உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி வகுத்துள்ள விதிகளின் படி, ஒரு வீரர் 18 மாதங்களில் 3 முறை தொடர்ந்து பரிசோதனைக்கு வராவிட்டால், அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்க அறிவுறுத்தியுள்ளது

காலிறுதிச் சுற்றில் தீபிகா

சென்னையில் நடைபெற்றுவரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனை தீபிகா பலிக்கல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டித் தரநிலையில் முதலிடத்தில் உள்ள இவர், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்து வீராங்கனை யாத்ரெப் அடெலை 3-0 என நேர் செட்களில் தோற்கடித்தார்.

யாத்ரெப் தோல்வியுற்றாலும், 5 எகிப்து வீராங்கனைகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் மான்கான்கர், பரிமித் சிங், பிரனாய் மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் 4-வது சுற்றை எட்டியுள்ளனர்.

விளையாட்டு விருதுகள் விவரம்

ராஜீவ் காந்தி கேல் ரத்ன: மேரி கோம், விஜேந்தர் சிங், சுசீல் குமார்.

அர்ஜுன விருது: மங்கள் சிங் சாம்பியா (வில்வித்தை), கே.சினிமோல் பெüலோஸ் (தட களம்), சாய்னா நெஹ்வால் (பாட்மின்டன்), எல்.சரிதா தேவி (குத்துச்சண்டை), தானியா சச்தேவ் (செஸ்), கெüதம் கம்பீர் (கிரிக்கெட்), இக்னேஸ் திர்கே, சுரிந்தர் கெüர் (இருவரும் ஹாக்கி), பங்கஜ் ஷிர்சத் (கபடி), பருல் டி.பார்மர் (பாட்மின்டன்- உடல் ஊனமுற்றோர்), சதீஷ் ஜோஷி (துடுப்புப் படகு), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்), பெüலமி கடக் (டேபிள் டென்னிஸ்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), ஜி.எல். யாதவ் (பாய்மரப் படகு).

தியான்சந்த் விருது: இஷார் சிங் தியோல் (தட களம்), சத்பீர் சிங் தாஹியா (மல்யுத்தம்).

துரோணாச்சார்ய விருது: பல்தேவ் சிங் (ஹாக்கி), ஜெய்தேவ் பிஷ்ட் (குத்துச்சண்டை), சத்பால் (மல்யுத்தம்), புல்லேலா கோபிசந்த் (பாட்மின்டன்).

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' அதிரடி: அட்டவணை அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக் கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரூ, ஐதராபாத் மற்றும் டில்லியில் போட்டிகள் நடக்க உள்ளன. பைனல், ஐதரா பாத்தில் நடக்கிறது.

உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் மோத உள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு, முதலாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கவிருந்தது. ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இத்தொடர் கைவிடப் பட்டது. தற்போது இரண்டாவது தொடர் வரும் அக். 8 ம் தேதி இந்தியாவில் நடக்க உள்ளது.

12 அணிகள்: மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய தரப்பில் ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் நடப்பு சாம்பியன் டெக் கான் சார்ஜர்ஸ், இரண்டா வது இடம் பிடித்த பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் இடம் பெற்று உள்ளன. ஆஸ்தி ரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கி லாந்து தரப்பில் தலா இரண்டு அணிகளும், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தரப்பில் தலா ஒரு அணி களும் தொடரில் பங்கேற்க உள்ளன.

போட்டி முறை:மொத்தம் உள்ள 12 அணி கள் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு, லீக் போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணி கள் 2 வது சுற்றுக்கு (8 அணிகள்) தகுதி பெறும். இதில், 2 பிரிவாக அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். இதன் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். வரும் அக். 8 ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரூ அணி, தென் ஆப்ரிக் காவின் கோப்ராஸ் அணி யுடன் மோத உள்ளது. அரை யிறுதிப் போட்டிகள் அக். 21 மற்றும் 22 ம் தேதிகளில் நடக்கிறது. பைனல் அக். 23 ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. மொத்தம் 23 போட்டிகள் 16 நாட்களில் நடக்க உள்ளன. போட்டி கள் இந்திய நேரப்படி மாலை 4, இரவு 8 மணிக்கு துவங்குகிறது. சாம்பி யன்ஸ் லீக் "டுவென்டி-20' கோப்பையை, வரும் 5 ஆண்டுகளுக்கு வழங்கும் உரிமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத் தொகை ரூ. 170 கோடி

தொடர்ந்து தோனி "நம்பர்-1'

ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிக்கான புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தோனி 828 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் யுவராஜ் (784) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (767) பிடித்துள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சேவக் (732), ஏழாவது இடத்தில் உள்ளார். சச்சின், காம்பிர் முறையே 15 மற்றும் 16 வது இடங்களை பெற்றுள்ளனர். சிறந்த டெஸ்ட் அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா (128), தென் ஆப்ரிக்கா (119), இந்தியா (117) முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஒருநாள் அணிகள் ரேங்கிங்கில் முதல் 3 இடங்களில் தென் ஆப்ரிக்கா (126), ஆஸ்திரேலியா (122), இந்தியா (121) உள்ளன.

ஐ.பி.எல். போட்டி இங்கிலாந்து வீரர்கள் விலகல்?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. இது வரை இரண்டு ஐ.பி.எல். போட்டி நடந்துள்ளது. முதல் போட்டி கடந்த ஆண்டு இந்தியாவிலும், 2-வது போட்டி இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.

இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களால் ஆட முடியாத நிலை ஏற்படும். ஒவ்வொரு நாட்டு வாரியத்துடனும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2012-20 ஆண்டு வரை ஒவ்வொரு நாடும் விளையாடும் டெஸ்ட், ஒருநாள் போட்டி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்ற நாடுகளை விட அதிகமாக போட்டிகளில் விளையாடுகிறது. 97 டெஸ்ட், 159 ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது.

இந்த போட்டி அட்ட வணையை ஐ.சி.சி. அங்கீகரித்தால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்த 8 ஆண்டுக்கு (2016 வரை) ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்படும். ஐ.பி.எல். போட்டி நேரத்தில் அந்த அணி வேறு போட்டியில் விளையாட வேண்டிய நிலை இருக்கும்.

இங்கிலாந்து வீரர்களில் பிளின்டாப், பீட்டர்சன், ஒவா சிஷ்ஷா, காலிங்வுட், ரவி போபரா, டிமிட்ரி மாஸ்கரெனஸ் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

இதில் பிளின்டாப் (சென்னை சூப்பர் கிங்ஸ்), பீட்டர்சன் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்) ஆகியோர் தலா ரூ.7.5 கோடி கொடுத்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து சிக்கலில் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர், அணி நிர்வாகத்தை விமர்சித்து புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.

கடந்த 2008ல் அக்தர் பாகிஸ் தான் கிரிக்கெட் விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதத்தை எதிர்த்து இன்னும் கோர்ட் படியேறிக் கொண்டு உள்ளார். இதன் காரணமாகவே அணியிலும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். உடற் தகுதியை காரணம் கூறி உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், இலங்கைத் தொடரில் அக்தர் சேர்க்கப்படவில்லை. தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி (மினி உலககோப்பை) தொடருக்கான உத்தேச அணியிலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

உடற்தகுதி கேள்வி: இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,),"" அக்தர் தனது உடற்தகுதி குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,'' என தெரிவித்தது. இதனால் வெறுப்படைந்த அக்தர்,"" பி.சி.பி., நிர்வாகம் தனக்கு எதிராக சதி செய்கிறது. இதனை சட்டரீதியாக சந்திப்பேன்,'' என "டிவி' யில் கடுமையாக பேட்டி கொடுத்தார்.

விளக்க கடிதம்: இதற்கு பி.சி.பி., செயல்இயக்குனர் ஜாகிர் கான் கூறுகையில்,"" கிரிக்கெட் போர்டு ஒப்பந்த விதிப்படி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க கூடாது. ஆனால் அக்தர் அணி நிர்வாகத்தினரை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு அவர் வரும் 31ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்,'' என்றார்.

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் : ஹைடன் உறுதி

ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்,' என ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன். தற்போது ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் கிரிக்கெட் அகாடமி துவங்க திட்டமிட்டிருக்கும் அவர், தொடர்ந்து ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் என்கிறார். இதுகுறித்து ஹைடன் கூறியது:சென்னை சூப்பர் கிங்ஸ், "டுவென்டி-20' போட்டிகள் என சென்னை, என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையகத்தை கூட இங்கு அமைக்கலாம். ஐ.பி.எல்., தொடரில் நீண்ட ஆண்டுகள் பங் கேற்று, திறமையை வெளி ப்படுத்த விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி அகாடமி துவங்க உள்ளேன். இதன் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர்கள் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்குவோம்.

நம்பிக்கை உள்ளது: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளை பார்த்தால், இரு அணிகளின் கைகளும் மாறி மாறி ஓங்கி இருந்தது. தற்போது இங்கிலாந்து முன்னணியில் உள்ளது.இருப்பினும் சிறந்த கேப்டன் மற்றும் வியக்கத்தக்க வீரர்களை கொண்டுள்ள எங்கள் அணி நம்பிக்கையுடன் உள்ளது.

நன்றி பிளின்டாப்: பிளின்டாப் ஓய்வு பெற எடுத்த முடிவு சரியோ, தவறோ, ஆனால் கிரிக்கெட்டில் சிறந்த வீரர். நிறைய சாதித்துள்ளார். ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட்டில் இருந்து விலகாததற்கு நன்றி சொல்ல வேண்டும். இருப் பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடவருவதற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

கிரிக்கெட் வளர்ச்சி: கிரிக்கெட் வளர்ச்சிக்கு"டுவென்டி-20' தொடர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இதன் மூலம் கிரிக்கெட்டை காப் பாற்றியுள்ளோம். கிரிக்கெட்டிற்கு மாற்றமும், புத்துணர்ச்சியும் தேவைப்பட்டது. இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என பிரிந்த நிலையில் பலவிதமான புதிய சவால்கள்வருவது இயற்கை தான்.

ஏற்க வேண்டும்: கால்பந்தில் பிரேசில் வீரர் காகா, இங்கிலாந்தின் பெக்காம் போன்றவர்கள் ஏதாவது ஒரு அணி நிர்வாகத்தில் இணைந்து விளையாட விரும்புவார்கள். தேசிய அணிக்காகவும் வந்து விளையாடுவார்கள். கிரிக்கெட்டிலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஓய்வுக்கு பின்: எப்போதும் கிரிக்கெட்டை விரும் பிக் கொண்டிருந்த நான், ஓய்விற்கு பின் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளேன். எல்லோரும் விரும்பும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் இனி வாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு ஹைடன் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் சபையைத் தவறாகக் கூறவில்லை முன்னாள் கப்டன் கங்குலி "பல்டி' அடித்தார்

வீரர்கள் தேர்வில் இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) பாரபட்சம் காட்டியதாக தான் ஒருபோதும் கூறவில்லை என சவுரவ் கங்குலி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

ஓய்வு தொடர்பாக தான் சொன்ன கருத்துகளை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.தனது சொந்த முடிவின் படியே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதாக கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். சமீபத்தில் பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர்,பி.சி.சி.ஐ. மீது கடுமையாகச் சாடினார். சச்சின்,ராவிட் போன்றோர் விளையாடி வரும் நிலையில் தான் மட்டும் விரைவில் ஓய்வு பெறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக ஆதங்கப்பட்டார்.இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட போதிய திறமை என்னிடம் இருந்தது. ஆனால்,இந்திய கிரிக்கெட் சபை விதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது என கங்குலி கூறியதாகச் செய்திகள் வெளியாயின.இதற்கு பி.சி.சி.ஐ.சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் பி.சி.சி.ஐ.பற்றி விமர்சித்ததாக வெளியான செய்திகளை கங்குலி மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;

பி.சி.சி.ஐ. குறித்து நான் தெரிவித்ததாக வந்த கருத்துகள் உண்மையானதல்ல.எனது கருத்துகள் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளன. என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.இது சம்பந்தமாக உண்மையில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்பதை அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதேபேட்டி ஒரு ஆங்கில பத்திரிகையில் சரியாக வெளியிடப்பட்டுள்ளது.இதை எல்லோரும் படித்திருப்பார்கள் என நம்புகிறேன். இதிலிருந்து ஒரே பேட்டியில் இரு வேறு கருத்துகளைச் சொல்லியிருக்க முடியாதென உறுதியாகப் புரிந்து கொள்ளலாம்.எனது கருத்துகளுக்குப் பதிலளிப்பவர்கள் முதலில் அந்த பேட்டியில் என்ன தெரிவித்துள்ளேன் என்பதை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளவும்.

எனது கருத்துப் பற்றி பி.சி.சி.ஐ.தலைவர் ராஜிவ் சுக்லா கவலை தெரிவித்திருந்தார்.அவர் ""ரிவி'க்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பதிலளித்துள்ளார்.உண்மையில் அந்த செய்தியில் என்ன உள்ளது என்பதை அவர் கவனிக்கவேண்டும்.

சச்சின், ராவிட் குறித்து எந்தவித மாறுபட்ட கருத்துகளும் நான் தெரிவிக்கவில்லை.அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.நான் ஓய்வு பெறமுடிவெடுத்தேன்.இது என்னுடைய சொந்த முடிவென்று தான் பேட்டியில் சொன்னேன்.

ஐ.பி.எல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.அதைப்பற்றி தினமும் ஏதாவது ஊகமான செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். இப்போது என்னைப்பற்றி வருகிறது.இதில் ஒன்றுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நான் மீண்டும் கப்டனாக நியமிக்கப்படவுள்ளேன் என்ற செய்தி.எந்த முடிவாக இருந்தாலும் அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்கும். அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பது ஜோன் ரைட்டா அல்லது மைக்கேல் பெவனா என்பது பற்றி எனக்குத் தெரியாது.ஏனென்றால் நான் முடிவெடுக்கும் இடத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்

வீரர்கள் திட்டம்: கிறிஸ்டன் எச்சரிக்கை

பிளின்டாப் வழியில் மற்ற வீரர்களும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் பங்கேற்று அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்,'' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண் டுள்ளது என்ற கருத்து உள்ளது. இந்நிலையில் வீரர்களின் இதுபோன்ற செயல்களால் ரசிகர்கள், சிறந்த வீரர்களின் ஆட்டத்தை காணமுடியாமல் போகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:இப்போதெல்லாம் நாள் முழுவதும் விளையாடி, 25 ஓவர்கள் பந்து வீசுவதற்கு எந்த வீரர்களும் தயாராக இல்லை. அதற்கு பதில் ஆறு வார கால தொடரில் பங்கேற்று, ஒரு நாளைக்கு 4 ஓவர்கள் மட்டும் பவுலிங் செய்து விட்டு வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்கத்தான் விரும்புகிறார்கள். இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள்மற்றும் "டுவென்டி-20'போட்டிகளில் மட்டும் பங்கேற்க விரும்புகிறார்கள்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிகளை குறைத்து, "டுவென்டி-20' போட்டிகளை அதிகரிப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் பிளின்டாப் திட்டம்: இங்கிலாந்து அணியின் பிளின்டாப் பிரபலமான வீரர். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார். ஏனெனில் காயம் காரணமாக உடல் ஒத்துழைக்கவில்லை என்கிறார். ஆனால் ஒருநாள் மற்றும்"டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். அவரது இந்த முடிவு ஏன் மிகச்சிறந்ததாக இருக்கக்கூடாது.

குறைந்த டெஸ்ட்: இந்திய அணி இந்த ஆண்டு ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் வகையில் அட்டவணை உள்ளது. இது போதுமானதா? அல்லது மற்ற வகைப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. "டுவென்டி-20' இல்லை: இந்திய அணி வரும் ஏப்ரல் மாதம் (2010) வெஸ்ட் இண்டீசில் நடக்க இருக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க செல்கிறது. அதில் இந்திய அணி, 6 "டுவென்டி-20', போட்டிகளில் பங்கேற்க உள்ளது.இதில் முக்கியமானது என்னவென்றால், வெஸ்ட் இண்டீஸ் செல்லும் முன்பு, ஒரு "டுவென்டி-20' போட்டியில் கூட இந்திய அணி பங்கேற்று இருக்காது. இப்படித்தான் அட்டவணை உள்ளது. இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்

இந்தியாவில் உலககோப்பை உறுதி

பாதுகாப்பு குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) முழு திருப்தி அளித்துள்ள நிலையில், உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள்) அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலககோப்பை ஹாக்கி தொடர், அடுத்த ஆண்டு (2010) இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் 7 ம் தேதி முதல் 20 ம் நடக்க உள்ளது. இருப்பினும் பாதுகாப்பு பிரச்னைகளின் காரணமாக இத்தொடரை மலேசியாவில் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வந்தது.ஆனால் இந்தியாவில் இத்தொடர் நடப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் லியான்ட்ரோ நேக்ரே கூறுகையில்,"" உலககோப்பை தொடரை நடத்துவதில் பாதுகாப்பு குறைபாடு முக்கிய பிரச்னையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கிறது. போட்டி நடக்கும் மைதானம், வீரர்கள் தங்க உள்ள ஓட்டல்கள், போக்குவரத்து நடைமுறைகள் ஆகியவற்றை பார்வையிட்டோம். அவற்றில் குறைபாடுகள் எதுவும் இல்லை,'' என்றார்.

28 ஆண்டுகளுக்குப் பின்...: இதற்கு முன் கடந்த 1982 ம் ஆண்டு இந்தியாவில் (மும்பை) உலககோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக இந்தியா இத்தொடரை நடத்த உள்ளது. உலககோப்பை தொடரை இந்தியா கடந்த 1975 ம் ஆண்டு கைப்பற்றியுள்ளது. வரும் 2010 ம் ஆண்டு ஹாக்கி உலககோப்பையை "ஹீரோ ஹோண்டா' வழங்க உள்ளது

எதிர்கால கணவருடன்சானியா

இந்திய பெண்கள் டென்னிசின் நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் 83 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை. தற்போது 22 வயதாகும் அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவரை திருமணம் செய்ய இருப்பவர் குழந்தை பருவ நண்பரான சோஹ்ராப்(23). நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு யு.எஸ்., ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சியில்ஈடுபட்டு வருகிறார் சானியா.இம்முறை வித்தியாசமாக அவரது எதிர்கால கணவரும் பயிற்சியில் சானியாவுக்கு உதவுகிறார்.

இதுகுறித்து புதிய மணப்பெண் சானியா மிர்சா கூறியது:நிச்சயத்திற்கு பிறகு நானும் சோஹ்ராப்பும் அதிக நேரங்களை சேர்ந்து செலவிடவே விரும்புகிறோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அடுத்தடுத்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதற்காக நான் அதிக நேரம் மைதானத்தில் தான் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே டென்னிசில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள சோஹ்ராப், என்னுடன் களத்தில் உதவி செய்ய முடிவு செய்துள்ளார்.

பின் தொடர்கிறார்

நான் டென்னிஸ் விளையாடுவதையும், பயிற்சி செய்வதையும் ரசித்து பார்க்கிறார். மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருப்பார். ஆனால் நான் டென்னிஸ் விளையாட துவங்கிய நாளில் இருந்து அவர் என்னை பின் தொடர்கிறார்.

மாற்றம் இல்லை

நிச்சயத்திற்கு பின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டென்னிசை எடுத்துக்கொண்டால் வழக்கம் போல்தான். பெரிய அளவில் மாற்றமில்லை. எனது அம்மாவும், அப்பாவும் என்னைத் தொடர்ந்து வந்து எனக்கு உதவியாக உள்ளனர்.

யு.எஸ்.ஓபனில் சாதிப்பேன்

இன்னும் சிலவாரங்களில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் துவங்க உள்ளது. எனவே இப்போதைக்கு டென்னிஸ் தவிர எந்த நினைவுகளும் இல்லை.கடினமான களத்தில் எப்போதும் சிறப்பாகவே நான் செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்து வரஇருக்கும் 7 வாரங்களும் நான் பிட்னசுடன் இருப்பேன் எனநம்புகிறேன். அப்படி இருந்தால் யு.எஸ்.ஓபன்தொடரில் சாதிக்க முயற்சி செய்வேன். இவ்வாறு சானியா மிர்சா தெரிவித்தார்.இம்மாத இறுதியில் அமெரிக்காபுறப்படுகிறார் சானியா. சோஹ்ராப் தனது படிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

சாம்பியன் லீக் "T20' போட்டிக்கான மைதானங்கள்

அக்டோபர் 8 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறும் சாம்பியன் லீக் "இருபதுக்கு 20' கிரிக்கெட் போட்டிகள் டில்லி, பெங்களூர், ஹைதராபாத் மைதானங்களில் நடைபெறுமென்று சாம்பியன் லீக் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

இந்த சாம்பியன் லீக் "2020' கிரிக்கெட் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். "இருபதுக்கு20' இரண்டாவது தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் தோல்வியடைந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 2009 லீக் சீசனில் அதிக போட்டிகளை வென்ற டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் இதிலடங்கும்.

அவுஸ்திரேலிய உள்நாட்டு "2020' கிரிக்கெட் தொடரில் இறுதியில் மோதிய விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ், நியூசவுத் வேல்ஸ் ப்ளூ, தென்னாபிரிக்காவிலிருந்து கேப் கோப்ராஸ், டைமண்ட் ஈகிள்ஸ் , நியூஸிலாந்திலிருந்து ஒடாகோ வோல்ட்ஸ் , மேற்கிந்திய தீவுகளிலிருந்து டிரினிடாட் அன்ட் டுபாகோ, இலங்கையிலிருந்து வயாம்பா ஆகிய அணிகள் இதில் பங்கு பெறுகின்றன.

இங்கிலாந்திலிருந்து வரும் அணி ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்.

12 அணிகள் 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் முறையில் ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் முடிவுற்ற நிலையில், 4 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதன் பிறகு இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்

ஐடிஎஃப் டென்னிஸ்: பட்டம் வென்றார் சானியா

அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டனில் நடைபெற்ற் ஐ.டி.எஃப். சாலஞ்சர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் சானியா மிர்சா வென்றுள்ளார்.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு வீராங்கனை ஜூலி காயினை 7-6,6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் போட்டித் தரநிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சானியா. காயின் இப் போட்டிக்கான தரநிலையில் முதலிடத்தில் இருந்தார்.

காயினை வீழ்த்தியதன் மூலம் உலக ஒற்றையர் டென்னிஸ் தர வரிசையில் 83-வது இடத்திலிருந்து 80-வது இடத்துக்கு சானியா முன்னேறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபை மீதான கங்குலியின் குற்றச்சாட்டால் சர்ச்சை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இந்தியாவின் சிறந்த கப்டன் சௌரவ் கங்குலி, பி.சி.சி.ஐ.விதிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட்டிற்கு இன்னும் சிறிது காலம் நல்ல முறையில் சேவையாற்றியிருக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

வங்காள மொழி தொலைக்காட்சி சனலில் பேசிய அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

சக வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கங்குலி தானும் இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி;

""ஆம்! என்னிடம் திறமை உள்ளது. இப்போது விளையாடிக் கொண்டிருந்தாலும் நன்றாகவே விளையாடியிருப்பேன். ஆனால், விதிகள் அனைவருக்கும் ஒன்றானதல்லவே' என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகார வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விதமாக தன் வாழ்வை திட்டமிட்டிருந்த கங்குலி, வர்ணனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தற்போது வங்காள தொலைக்காட்சி சனலில் குவிஸ் நிகழ்ச்சியை நடத்தும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் கங்குலி.

இதற்கிடையில் கங்குலியின் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஊடக குழு தலைவர் ராஜீவ் ஷீக்லா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

பி.சி.சி.ஐ. யை பொறுத்தவரை எந்த ஒரு வீரருக்கும் எதிராகவும் முன் அனுமானம் எதையும் கொள்ளும் வழக்கமில்லை. அணித் தேர்வுக்குழு விவகாரங்களில் பி.சி.சி.ஐ.ஒரு நாளும் தலையிட்டதில்லை. எந்த வீரரை சேர்க்க வேண்டும், எவரை விலக்க வேண்டும் என்பதெல்லாம் தேர்வுக் குழுவை பொறுத்ததே' என்று கூறியுள்ளார்

அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்

அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்' என இங்கிலாந்து வீரர் பீற்றர்சன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் பீற்றர்சன் பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இவர் கூறியதாவது;

சில மாதங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகள் எப்போதும் நீடித்திருக்குமென நினைத்தேன்.ஆனால், தற்போது பார்த்தால் சிறப்பான வீரர்கள் கூட டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கிறார்கள்.ஆனால், இவர்கள் பணம் கொழிக்கும் "ருவென்ரி20' போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவிக்கிறார்கள்.இது போன்ற செயல்களால் அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் போட்டிகள் அழிந்துவிடுமெனத் தெரிவித்தார்.

ஸ்ரீசாந்த் கேப்டன்

கேரளா கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் (கே.சி.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட கேரள அணியை, அந்த மாநில கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வரும் செப்டம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடக்க வுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பெறவில்லை. இதனை யடுத்து, உள்ளூர் போட்டிகளில் முழுகவனம் செலுத்தி திறமையை நிரூபிக்க உள்ளார். ரோகன் பிரேம் துணைக் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார்.இது குறித்து கேரள கிரிக்கெட் சங்க தேர்வுக் குழுத் தலைவர் கோபகுமார் கூறுகையில், இத்தொடருக் கான கேரள அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

திறமையான வீரர்களைக் கண்டறிய தமிழகத்தில் ஹேடன் சுற்றுப்பயணம்

திறமையான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவதற்காக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹேடன் தமிழகத்தில் செப்டம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 51 - வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது:

2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலத்தில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பல்வேறு நிலைகளில் 458 போட்டிகள் நடத்திருப்பது பாராட்டுக்குரியது.

சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், திருச்சி மாவட்டத்திலிருந்துதான் நடுவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

திருச்சியில் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், தேசியக் கல்லூரியிலும் செயற்கை புல்தரையுடன் கூடிய ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல, மேலும் சில இடங்களில் ஆடுகளங்கள் அமைய வாய்ப்புகள் உள்ளன.

கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கிரிக்கெட் அகாதெமிகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சியில் கிரிக்கெட் அகாதெமி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலத்தின் மையநகரம் மற்றும் விமான நிலைய வசதி போன்ற வசதிகள் இருப்பதால் திருச்சியில் கிரிக்கெட் அகாதெமி அமையும்பட்சத்தில், வீரர்களுக்கு சிறந்த அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு எதிர்காலத்தில் திருச்சியில் சர்வதேச மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கிரிக்கெட் அகாதெமி: சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாதெமி தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் உள்ள திறமையானவர்களைக் கண்டறிவதற்காக வரும் செப்டம்பரில் ஹேடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார் விஸ்வநாதன்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையர் கருணாசாகர் வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் கே. ரகுநாதன் தலைமை வகித்தார். மாநில கிரிக்கெட் சங்க உதவிச் செயலர் டி. ஜூலியஸ் விஜயகுமார், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் எம். காளிதாஸ், செயலர் கே.ஜி. முரளிதரன், துணைச் செயலர்கள் பி. இளங்கோவன், ஆர். கணேசன், பொருளாளர் எஸ். எர்னஸ்ட் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பைனலில் சானியா

சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறினார்.அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் சானியா, சீனாவின் மெங் யுவானை சந்தித்தார். முதல் செட்டை சானியா 6-1 என மிகச் சுலபமாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட சீன வீராங்கனை மெங் 6-4 என பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா 6-4 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். பைனலில் சானியா, பிரான்சின் ஜூலி காயினை எதிர்கொள்கிறார்.

6 ஆண்டுகளில் முதன் முறையாக

லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராண்ட் பிரீ தட களப் போட்டியில் போல்வால்ட் ஜாம்பவான் ரஷியாவின் இசின்பயேவா பட்டம் வெல்ல முடியாமல் போனார்.

போல்வால்ட் போட்டிகளில் பலமுறை உலக சாதனையை புதுப்பித்துக்கொண்டுள்ள இசின்பயேவா, போலந்து வீராங்கனை அன்ன ரோகெüஸ்காவிடம் முதலிடத்தை இழந்தார். இருவரும் 4.68 மீட்டர் உயரம் தாண்டினர். ஆனால் இசின்பயேவா தனது கடைசி வாய்ப்பிலேயே அதை எட்டினார். இதையடுத்து இரண்டாம் இடத்துடன் அவர் திருப்தி அடையவேண்டியதாயிற்று.

"எதிர்பாராத இம்முடிவால் சற்று ஏமாற்றம் அடைந்தேன். அது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. என்றாலும் உலகப் போட்டிக்கு இன்னும் 3 வார காலம் உள்ளது. போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டு அதில் பட்டத்தைக் கைப்பற்றும் நம்பிக்கை உள்ளது' என்றார் இசின்பயேவா.

கடந்த 6 ஆண்டுகளில் பட்டம் வெல்லமுடியாமல் இசின்பயேவா ஏமாறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2003-ம் ஆண்டு இதுபோல பெரிய அளவிலான போட்டியில் தோல்வியுற்றார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டிக்கான பரீட்சார்த்த போட்டியாக இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உசேன் போல்ட் வெற்றி: அதே சமயம் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையைக் கொண்டுள்ள ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் 9.91 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

மற்றொரு ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் 10.11 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்

இடம் இருக்கிறது... மனம் இல்லையே...!!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன.

தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. மேற்கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன.

ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அத்தியாவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அந்த விளையாட்டுகளுக்கான மாநிலச் சங்கங்கள் செயல்பட அலுவலகம்கூட இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

சென்னையில் நேரு தங்கக் கோப்பை கால்பந்து போட்டியை 1993-ம் ஆண்டு நடத்த முனைந்தபோது, ரிப்பன் பில்டிங்கிற்கு பின்புறம் இருந்த பெரிய மைதானத்தை சர்வதேச தரத்திலான ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியமாக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. அதில் கால்பந்தாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த விளையாட்டுக்கு மாநில அலுவலகம் அதே ஸ்டேடியத்தில் எளிமையான வகையில் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் இன்றுவரை வாலிபால், தட களம், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், கேரம், குத்துச்சண்டை, டிரையத்லான், செஸ் விளையாட்டுகள் மட்டும் அங்கு அலுவலகங்களைப் பெற்றுள்ளன. உலக வாலிபால் மேம்பாட்டு மையம், அகில இந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹால் ஆஃப் செஸ், ஹால் ஆஃப் பாக்ஸிங், ஹால் ஆஃப் டேபிள் டென்னிஸ், ஹால் ஆஃப் வெயிட் லிப்டிங் என்று பயிற்சி மையங்களும் உள்ளன. இவை தவிர நேரு உள்ளரங்க வளாகத்தில் வாள்வீச்சு, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கபடி, கூடைப்பந்து, ஹாக்கி, நீச்சல் போன்ற அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகள் பலவற்றுக்கு அலுவலகம் ஒதுக்கப்படவில்லை.

சர்வதேச விளையாட்டு தரமதிப்பீட்டுக் குழுவின் விதிமுறைகளை மீறும்விதமாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டாலும், விளையாட்டை செயல்படுத்த வேறுவழியில்லை என்ற அடிப்படையில் பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தில் அலுவலகங்களை ஒதுக்கியுள்ளது எஸ்.டி.ஏ.டி. ஆனால் என்ன அடிப்படையில் அவை ஒதுக்கப்பட்டு வருகின்றன என்கிற விவரம் தெரியவில்லை.

கேள்விப்பட்ட வரை, ஒருசில விளையாட்டுச் சங்கங்களில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அலுவலகம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

கடைசியாக ஒதுக்கீடு பெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனம் உள்பட சிலர் தங்களுக்குக் கிடைத்த அலுவலங்களை அதிநவீனமாக பல லட்சம் ரூபாய் செலவில் அமர்க்களமாக கட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. விளையாட்டு மேம்பாட்டுக்கு செலவிட வேண்டிய பணம், அலுவலக மேம்பாட்டுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச தரத்திலான ஸ்டேடியத்தின் தரமதிப்பீடு காக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு இஷ்டத்துக்கு சில சங்கங்கள் அலுவலகத்தை கட்டியுள்ளது வருத்தத்துக்குரியது என்றார்.

அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒதுக்கீடு பெற்ற சில சங்கங்கள் ரூ. 1200 முதல் ரூ. 1500 வரையிலான குறைந்த வாடகையைக் கூட செலுத்தாமல் இருந்து வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, மாநில சாம்பியன் போட்டியைக் கூட முறையாக நடத்த முடியாமல் தவிக்கும் சங்கங்களின் அலுவலக ஒதுக்கீடு கோரிக்கைகள், எஸ்.டி.ஏ.டி. தலைமை அலுவலக மேஜையில் காலம் காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சில விளையாட்டுகளின் அலுவலகங்கள் தலைவர் அல்லது செயலரின் வீட்டிலும், சில நடமாடும் அலுவலகமாகவும் செயல்பட்டுவருகின்றன.

கேரம் விளையாட்டுக்கு புதிய அலுவலகம்: இதற்கிடையே ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெறாத கேரம் விளையாட்டுக்காக நேரு ஸ்டேடியத்தின் பின்பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.டி.ஏ.டி.யே அலுவலகம் கட்டிக்கொடுத்துள்ளது. அதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

எஸ்.டி.ஏ.டி. நினைத்தால் அலுவலகம் கோரும் நலிந்த விளையாட்டுகளுக்கும் அலுவலகம் ஒதுக்கமுடியும். அதற்கு இடம் இருக்கிறது. ஆனால், மனம் வேண்டுமே

இரட்டை மகிழ்ச்சியில் பெடரர்

டென்னிஸ் "சூப்பர் ஸ்டார்' ரோஜர் பெடரர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் திகழ்கிறார். ஒற்றையர் பிரிவில் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்துள்ளார். உலகின் "நம்பர்-1' வீரரான இவர், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உற்சாகத்தில் காணப்படுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" எனது மனைவி மிர்காவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள். மனைவி மிர்கா, குழந்தைகள் சார்லின் ரிவா, மைலா ரோஸ் ஆரோக்கியமாக உள்ளனர்,'' என்றார்.

ஆஸ்திரேலியாவுடன் ஒருதின தொடர்: ஜெய்ப்பூரில் முதலாவது போட்டி

ஏழு போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது:

இந்தியாவுடன் ஒருதின தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அக்டோபர் 21-ம்தேதி இந்தியா வருகிறது.

ஜெய்ப்பூரில் அக்டோபர் 25-ம்தேதி முதலாவது போட்டியில் பங்கேற்கிறது. கடைசிப் போட்டி மும்பையில் நவம்பர் 11-ம்தேதி நடைபெறுகிறது. குவாஹாட்டியில் நவம்பர் 8-ம்தேதி நடைபெறும் 6-வது போட்டியைத் தவிர மற்றைய ஆட்டங்கள் அனைத்தும் பகலிரவாக நடைபெறும். மும்பையிலிருந்து நவம்பர் 12-ம்தேதி ஆஸ்திரேலிய அணி தாயகம் திரும்புகிறது.

அட்டவணை விவரம்

அக்டோபர் 25: முதல் போட்டி (ஜெய்ப்பூர்).

அக்டோபர் 28: 2-வது போட்டி (நாகபுரி).

அக்டோபர் 31: 3-வது போட்டி (தில்லி).

நவம்பர் 2: 4-வது போட்டி (மொஹாலி).

நவம்பர் 5: 5-வது போட்டி (ஹைதராபாத்).

நவம்பர் 8: 6-வது போட்டி (குவாஹாட்டி).

நவம்பர் 11: 7-வது போட்டி (மும்பை)

இந்தியா அபார வெற்றி

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் புல்டான் (122), வில்லியம்சன் (40),யங் (20), பியர்டு (20) கைகொடுத்தனர்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சங்வான் 5 விக்கெட் வீழ்த்தினார்.எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரகானே (95) சூப்பர் துவக்கம் கொடுத்தார்.

முரளி விஜய் (2), பத்ரிநாத் (0) ஏமாற்றினர். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 108 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 115 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

செல்வாக்கு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் அலுவலகம்?

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன.

தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அவற்றுக்கு மாநிலச் சங்கத்தை செயல்படுத்த அலுவலகம்கூட இல்லை என்பது வேதனையான விஷயம்.

சென்னையில் நேரு தங்கக் கோப்பை கால்பந்து போட்டியை 1993-ம் ஆண்டு நடத்த முனைந்தபோது, ரிப்பன் பில்டிங்கிற்கு பின்புறம் இருந்த பெரிய மைதானத்தை சர்வதேச தரத்திலான ஸ்டேடியமாக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. அதில் கால்பந்தாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த விளையாட்டுக்கு மாநில அலுவலகமும் அதே ஸ்டேடியத்தில் சாதாரண வகையில் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் இன்றுவரை சில விளையாட்டுகள் மட்டும் அங்கு அலுவலகங்களைப் பெற்றுள்ளன. உலக வாலிபால் மேம்பாட்டு மையம், அகில இந்திய செஸ் சம்மேளனம், ஹால் ஆஃப் செஸ், ஹால் ஆஃப் டேபிள் டென்னிஸ் ஆகியனவும் அதில் அடங்கும். தவிர, நேரு உள்ளரங்க வளாகத்தில் வாள் வீச்சு, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டுகளுக்கான தரமதிப்பீட்டின் விதிமுறைகளை மீறும்விதமாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டாலும், விளையாட்டை செயல்படுத்த வேறுவழியில்லை என்ற அடிப்படையில் பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தில் அலுவலகங்களை ஒதுக்கியுள்ளது எஸ்.டி.ஏ.டி. ஆனால் எதன் அடிப்படையில் அவை ஒதுக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால் கேள்விப்பட்ட வரை, விளையாட்டுச் சங்கங்களில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அலுவலகம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. கடைசியாக ஒதுக்கீடு பெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனம் உள்பட சில சங்கங்கள் கவர்ச்சிகரமாக அதைக் கட்டியுள்ளன. இது குறித்து கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச தரத்திலான ஸ்டேடியத்தில் தரமதிப்பீடு காக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு இஷ்டத்துக்கு சில சங்கங்கள் அலுவலகத்தை கட்டியுள்ளது வருத்தத்துக்குரியது என்றார்.

அதில் இன்னொறு வேடிக்கை என்னவென்றால் ஒதுக்கீடு பெற்ற சில சங்கங்கள் ரூ. 1200 முதல் 1500 வரையிலான குறைந்த வாடகையைக் கூட செலுத்தாமல் இருந்து வருகின்றனவாம்.

இது ஒருபக்கம் இருக்க, மாநில சாம்பியன் போட்டியைக் கூட முறையாக நடத்த முடியாமல் தவிக்கும் சங்கங்களின் அலுவலக ஒதுக்கீடு கோரிக்கைகள், எஸ்.டி.ஏ.டி. தலைமை அலுவலக மேஜையில் காலம் காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சில விளையாட்டுகளின் அலுவலகங்கள் தலைவர் அல்லது செயலரின் வீட்டிலும், சில நடமாடும் அலுவலகமாகவும் செயல்பட்டுவருகின்றன.

கேரம் விளையாட்டுக்கு புதிய அலுவலகம்: இதற்கிடையே ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெறாத கேரம் விளையாட்டுக்காக நேரு ஸ்டேடியத்தின் பின்பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.டி.ஏ.டி.யே அலுவலகம் கட்டிக்கொடுத்துள்ளது. அரசின் உயர் அதிகாரி ஒருவர் அந்த விளையாட்டில் நிர்வாகியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. அதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

எஸ்.டி.ஏ.டி. நினைத்தால் அலுவலகம் கோரும் நலிந்த விளையாட்டுகளுக்கும் அலுவலகம் ஒதுக்கமுடியும். அதற்கு இடம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கங்களால் நமக்கு என்ன பயன் என்ற மனப்பான்மையில் சிலர் செயல்படுவதாகத் தெரியவருகிறது.

திமுக அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளில் ஏழாவது உறுப்பினர் செயலராக சமீபத்தில் பதவியேற்றுள்ள சத்யவிரத சாஹு, மிகவும் நல்ல முறையில் நடத்திவருவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவரால் இதுபோன்ற அநீதிகளைக் களையமுடியுமா

3-வது டெஸ்டிலும் வெற்றி பெறுமா இலங்கை?

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்றுவரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பலாம் எனக் கருதி 9 விக்கெட்டுக்கு 425 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்த பாகிஸ்தான், தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையைப் பெற்றுள்ளது.

492 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கை அணி, வியாழக்கிழமை நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது.

7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 309 ரன்களைச் சேர்த்தால் 3-0 என தொடரை வென்ற பெருமையை இலங்கை பெற்றுவிடும். அதற்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுவரை எந்த அணியும் 4-வது இன்னிங்ஸில் 492 ரன்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. ஒருவேளை இலங்கை வென்றால், அது விரட்டிப் பிடித்தலில் உலக சாதனையாகவும் அமையும். இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்துவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2003-ல் மேற்கிந்தியத்தீவுகள் அந்த சிறப்பை பெற்றது.

வலுவான தொடக்கம்: கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கைக்கு, பரணவிதானா- வர்ணபூரா ஜோடி 83 ரன்களைக் குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்தது.

நேர்த்தியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார் தொடக்க வீரர் பரணவிதானா. இவர், 73 ரன்களைச் சேர்த்திருந்தபோது ஆலமிடம் எளிதாக "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 131 ஆக இருந்தபோது வர்ணபூரா 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார். முன்னாள் கேப்டன் ஜயவர்தனே 2 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் சங்கக்கரா 50 ரன்களுடனும், சமரவீரா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் டிக்ளேர்: முன்னதாக பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 425 ரன்களைச் சேர்த்து 2-வது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்தது. 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைச் சேர்த்திருந்தது.

106 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் சோயப் மாலிக், 134 ரன்களுக்கு அவுட் ஆனார். உணவு இடைவேளைக்குச் சற்றுப் பின்னர் இன்னிங்ûஸ முடித்துக் கொண்டது பாகிஸ்தான்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்:

பாகிஸ்தான்: 299 & 425-9 டிக்ளேர் (ஷோயப் மாலிக் 134, மிஸ்பா உல் ஹக் 65, கம்ரான் அக்மல் 74, குல் 46, ஹெராத் 5-157).

இலங்கை: 233 & 183-3வி (பரணவிதானா 73, வர்ணபூரா 31, சங்கக்கரா 50 நாட் அவுட், கனேரியா 2-56)