கிரிக்கெட்டின் எதிர்காலம்...
ஹாக்கி டெஸ்ட் தொடர்: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி
செய்னாவுக்கு "தட்டம்மை'
ஊக்கமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள்: மறுப்பு குழப்பத்தில் பிசிசிஐ
காலிறுதிச் சுற்றில் தீபிகா
விளையாட்டு விருதுகள் விவரம்
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' அதிரடி: அட்டவணை அறிவிப்பு
தொடர்ந்து தோனி "நம்பர்-1'
ஐ.பி.எல். போட்டி இங்கிலாந்து வீரர்கள் விலகல்?
தொடர்ந்து சிக்கலில் அக்தர்
ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் : ஹைடன் உறுதி
இந்திய கிரிக்கெட் சபையைத் தவறாகக் கூறவில்லை முன்னாள் கப்டன் கங்குலி "பல்டி' அடித்தார்
ஓய்வு தொடர்பாக தான் சொன்ன கருத்துகளை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.தனது சொந்த முடிவின் படியே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதாக கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். சமீபத்தில் பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர்,பி.சி.சி.ஐ. மீது கடுமையாகச் சாடினார். சச்சின்,ராவிட் போன்றோர் விளையாடி வரும் நிலையில் தான் மட்டும் விரைவில் ஓய்வு பெறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக ஆதங்கப்பட்டார்.இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட போதிய திறமை என்னிடம் இருந்தது. ஆனால்,இந்திய கிரிக்கெட் சபை விதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது என கங்குலி கூறியதாகச் செய்திகள் வெளியாயின.இதற்கு பி.சி.சி.ஐ.சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் பி.சி.சி.ஐ.பற்றி விமர்சித்ததாக வெளியான செய்திகளை கங்குலி மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;
பி.சி.சி.ஐ. குறித்து நான் தெரிவித்ததாக வந்த கருத்துகள் உண்மையானதல்ல.எனது கருத்துகள் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளன. என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.இது சம்பந்தமாக உண்மையில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்பதை அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதேபேட்டி ஒரு ஆங்கில பத்திரிகையில் சரியாக வெளியிடப்பட்டுள்ளது.இதை எல்லோரும் படித்திருப்பார்கள் என நம்புகிறேன். இதிலிருந்து ஒரே பேட்டியில் இரு வேறு கருத்துகளைச் சொல்லியிருக்க முடியாதென உறுதியாகப் புரிந்து கொள்ளலாம்.எனது கருத்துகளுக்குப் பதிலளிப்பவர்கள் முதலில் அந்த பேட்டியில் என்ன தெரிவித்துள்ளேன் என்பதை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளவும்.
எனது கருத்துப் பற்றி பி.சி.சி.ஐ.தலைவர் ராஜிவ் சுக்லா கவலை தெரிவித்திருந்தார்.அவர் ""ரிவி'க்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பதிலளித்துள்ளார்.உண்மையில் அந்த செய்தியில் என்ன உள்ளது என்பதை அவர் கவனிக்கவேண்டும்.
சச்சின், ராவிட் குறித்து எந்தவித மாறுபட்ட கருத்துகளும் நான் தெரிவிக்கவில்லை.அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.நான் ஓய்வு பெறமுடிவெடுத்தேன்.இது என்னுடைய சொந்த முடிவென்று தான் பேட்டியில் சொன்னேன்.
ஐ.பி.எல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.அதைப்பற்றி தினமும் ஏதாவது ஊகமான செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். இப்போது என்னைப்பற்றி வருகிறது.இதில் ஒன்றுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நான் மீண்டும் கப்டனாக நியமிக்கப்படவுள்ளேன் என்ற செய்தி.எந்த முடிவாக இருந்தாலும் அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்கும். அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பது ஜோன் ரைட்டா அல்லது மைக்கேல் பெவனா என்பது பற்றி எனக்குத் தெரியாது.ஏனென்றால் நான் முடிவெடுக்கும் இடத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்
வீரர்கள் திட்டம்: கிறிஸ்டன் எச்சரிக்கை
இந்தியாவில் உலககோப்பை உறுதி
எதிர்கால கணவருடன்சானியா
சாம்பியன் லீக் "T20' போட்டிக்கான மைதானங்கள்
இந்த சாம்பியன் லீக் "2020' கிரிக்கெட் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். "இருபதுக்கு20' இரண்டாவது தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் தோல்வியடைந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 2009 லீக் சீசனில் அதிக போட்டிகளை வென்ற டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் இதிலடங்கும்.
அவுஸ்திரேலிய உள்நாட்டு "2020' கிரிக்கெட் தொடரில் இறுதியில் மோதிய விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ், நியூசவுத் வேல்ஸ் ப்ளூ, தென்னாபிரிக்காவிலிருந்து கேப் கோப்ராஸ், டைமண்ட் ஈகிள்ஸ் , நியூஸிலாந்திலிருந்து ஒடாகோ வோல்ட்ஸ் , மேற்கிந்திய தீவுகளிலிருந்து டிரினிடாட் அன்ட் டுபாகோ, இலங்கையிலிருந்து வயாம்பா ஆகிய அணிகள் இதில் பங்கு பெறுகின்றன.
இங்கிலாந்திலிருந்து வரும் அணி ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
12 அணிகள் 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் முறையில் ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் முடிவுற்ற நிலையில், 4 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதன் பிறகு இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்
ஐடிஎஃப் டென்னிஸ்: பட்டம் வென்றார் சானியா
இந்திய கிரிக்கெட் சபை மீதான கங்குலியின் குற்றச்சாட்டால் சர்ச்சை
வங்காள மொழி தொலைக்காட்சி சனலில் பேசிய அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
சக வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கங்குலி தானும் இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி;
""ஆம்! என்னிடம் திறமை உள்ளது. இப்போது விளையாடிக் கொண்டிருந்தாலும் நன்றாகவே விளையாடியிருப்பேன். ஆனால், விதிகள் அனைவருக்கும் ஒன்றானதல்லவே' என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகார வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விதமாக தன் வாழ்வை திட்டமிட்டிருந்த கங்குலி, வர்ணனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தற்போது வங்காள தொலைக்காட்சி சனலில் குவிஸ் நிகழ்ச்சியை நடத்தும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் கங்குலி.
இதற்கிடையில் கங்குலியின் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஊடக குழு தலைவர் ராஜீவ் ஷீக்லா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
பி.சி.சி.ஐ. யை பொறுத்தவரை எந்த ஒரு வீரருக்கும் எதிராகவும் முன் அனுமானம் எதையும் கொள்ளும் வழக்கமில்லை. அணித் தேர்வுக்குழு விவகாரங்களில் பி.சி.சி.ஐ.ஒரு நாளும் தலையிட்டதில்லை. எந்த வீரரை சேர்க்க வேண்டும், எவரை விலக்க வேண்டும் என்பதெல்லாம் தேர்வுக் குழுவை பொறுத்ததே' என்று கூறியுள்ளார்
அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் பீற்றர்சன் பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இவர் கூறியதாவது;
சில மாதங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகள் எப்போதும் நீடித்திருக்குமென நினைத்தேன்.ஆனால், தற்போது பார்த்தால் சிறப்பான வீரர்கள் கூட டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கிறார்கள்.ஆனால், இவர்கள் பணம் கொழிக்கும் "ருவென்ரி20' போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவிக்கிறார்கள்.இது போன்ற செயல்களால் அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் போட்டிகள் அழிந்துவிடுமெனத் தெரிவித்தார்.
ஸ்ரீசாந்த் கேப்டன்
திறமையான வீரர்களைக் கண்டறிய தமிழகத்தில் ஹேடன் சுற்றுப்பயணம்
பைனலில் சானியா
6 ஆண்டுகளில் முதன் முறையாக
இடம் இருக்கிறது... மனம் இல்லையே...!!!
இரட்டை மகிழ்ச்சியில் பெடரர்
ஆஸ்திரேலியாவுடன் ஒருதின தொடர்: ஜெய்ப்பூரில் முதலாவது போட்டி
இந்தியா அபார வெற்றி
செல்வாக்கு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் அலுவலகம்?
3-வது டெஸ்டிலும் வெற்றி பெறுமா இலங்கை?