உலகக்கோப்பை ஹீரோ
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜூன் 7ல் தேர்வு
நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர்
தேர்வுக்கு மீண்டும் "கட்' அடித்த தோனி
இடைவிடாத போட்டிகள் காரணமாக, தனது கல்லூரிப் பருவத் தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முறையாக "கட்' அடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.
ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில், விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில், அலுவலக நிர்வாகம் மற்றும் செயலாளர் நடைமுறைகள் கோர்ஸ் படித்து வருகிறார் தோனி. கடந்த ஆண்டு லண்டனில் நடந்த 2 வது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக, முதலாம் ஆண்டு தேர்வில் தோனி பங்கேற்க வில்லை.
இதே போல சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக இரண்டாம் ஆண்டு தேர்விலும் தோனியால் பங்கேற்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை.
இது குறித்து கல்லூரியின் தேர்வுத் துறை தலைவர் சின்கா கூறுகையில்,"" உலககோப்பையில் பங்கேற்றதால், தோனி இந்த ஆண்டும் தேர்வில் பங்கேற்க வில்லை. அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்கும் பட்சத்தில், மொத்தம் உள்ள ஆறு பருவத் தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலை ஏற்படும். இல்லாவிட்டால், 5 ஆண்டுகளுக்குள் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க வேண்டும். இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை,'' என்றார்.
சலுகை இல்லை: செயின்ட் சேவியர் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இதனால் கல்லூரி நிர்வாகம், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் தேர்வுகளை நடத்தலாம். ஆனால் தோனிக்கு தனிச் சலுகை அளிக்க கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை எனத் தெரிகிறது
புதிய "ஸ்பான்சர்' தேடுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியுடனான, சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சருக்கு' அழைப்பு விடுத்துள்ளது இந்திய அணி.
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' தற்போது சஹாரா நிறுவனம் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து, இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்யும் உரிமையை சஹாரா பெற்று இருந்தது.
ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் அப்போது இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' யாரும் கிடைக்க வில்லை. இதனையடுத்து சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் மேலும் 6 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதத்துடன் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ., ) ஆர்வம் காட்டி வருகிறது.
சாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு
தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இத்தொடர் வரும் செப். 10 ம் தேதி முதல் 26 வரை தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது.
இங்கிலாந்து விலகல்: இந்த முறை இந்தியா தரப்பில் ஐ.பி.எல்., சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் போட்டி அட்டவணையை மாற்றுமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விடுத்த வேண்டுகோளை, சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இத்தொடரிலிருந்து இங்கிலாந்து கவுன்டி அணிகள் விலகின. கடந்த முறை இங்கிலாந்து தரப்பில் 2 அணிகள் பங்கேற்றன.
உலகக்கோப்பையில் அசத்தியவர்
என்.பி.ஏ., பாணியில் ஐ.பி.எல்., போட்டி
அலுமினிய கிரிக்கெட் பேட் அறிமுகம்
மூன்று பைனல் வேண்டும்
டெஸ்ட் வீரர்கள்: யூசுப் வேதனை
மிடில் ஆர்டரில் கலக்கியவர்
இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம்
தோனி-3, காம்பிர்-2, ஜடேஜா-0
டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வீரர்களின் மோசமான ஆட்டமே முக்கிய காரணம். வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, அவர்களது "மார்க்' வருமாறு:
4-வது முறையாக உலக சாம்பியன்