தெண்டுல்கர் பற்றி விமர்சனம்


மும்பை அனைவருக்கும் சொந்தம், நான் மாராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் அதை விட இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறி இருந்தார்.
 
இதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கண்டனம் தெரிவித்து இருந்தார். அதோடு அந்த கட்சி தெண்டுல்கரை சரமாரியாக விமர்சனம் செய்து இருந்தது. தெண்டுல்கர் மராட்டியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று அந்த கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்து இருந்தார்.
 
தெண்டுல்கரை விமர்சனம் செய்ததற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
நான் ஒன்றை சொல்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் நம்மை இந்தியனாகத்தான் பார்ப்பார்கள். இந்தியாவுக்காகத்தான் விளையாடுகிறோம். மராட்டியம், அரியானா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அணியோடு இணையும் போது இந்தியா தான் முக்கியம். எப்போதுமே இந்தியா என்பதுதான் முதலில் இருக்க வேண்டும் மற்றதெல்லாம் 2-வது தான்.
 
தெண்டுல்கர் சொன்ன கருத்து சரிதான். அதை மதிக்க வேண்டும். அதை பின்பற்ற வேண்டும். அரசியல் வாதத்துக்கு கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுப்பது தவறானது.
 
தெண்டுல்கர் 20 ஆண்டுகள் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
தற்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு சிறந்த அணி இருந்தது கிடையாது. டோனி கேப்டன் பதவியில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்

காம்பிர் மீண்டும் "நம்பர்-1'

ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய வீரர் கவுதம் காம்பிர் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) டெஸ்ட் வீரர்களுக்கான புதிய ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை துபாயில் நேற்று அறிவித்தது. இதில் இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் 886 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 

இதற்கு கான்பூர் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததே காரணம். இவர் கடைசியாக விளையாடிய நான்கு டெஸ்டிலும் சதமடித்து அசத்தினார். 

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருது வென்ற காம்பிர், கடந்த ஜூலை மாதம் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார். பின்னர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது கான்பூர் டெஸ்ட் இவரை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. 

தனது சகோதரியின் திருமணம் காரணமாக மும்பையில் வரும் டிச. 2ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்டில் காம்பிர் பங்கேற்காதது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம். இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (869 புள்ளி), கேப்டன் சங்ககரா (822 புள்ளி) முறையே 2வது மற்றும் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.


சச்சின் சரிவு:

கான்பூர் டெஸ்டில் காம்பிருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்க்க உதவிய சேவக், நான்கு இடங்கள் முன்னேறி 19வது இடம் பிடித்தார். டெஸ்ட் அரங்கில் 28வது சதமடித்து அசத்திய டிராவிட், மூன்று இடங்கள் முன்னேறி 18வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான கேப்டன் தோனி 32வது, யுவராஜ் 44வது இடத்தில் உள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மற்றும் லட்சுமண் முறையே 16வது மற்றும் 20வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.


ஹர்பஜன் முன்னேற்றம்:

டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 704 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஜாகிர் கான் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கான்பூர் டெஸ்டில் ஆட்டநாயகனாக வலம் வந்த இந்தியாவின் ஸ்ரீசாந்த் 30வது இடத்துக்கு முன்னேறினார். இஷாந்த் சர்மா 24வது இடத்தில் உள்ளார். 


முரளிதரன் பின்னடைவு:

இலங்கை வீரர் முரளிதரன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஜான்சன் 2வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் (7வது), பாகிஸ்தானின் முகமது ஆசிப் (9வது) "டாப்-10' வரிசையில் உள்ளனர்

மீண்டும் உலக கோப்பை

தற்போதுள்ள இலங்கை அணிக்கு வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) வெல்வதற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது என்கிறார் அணியின் கேப்டன் சங்ககரா.

சமீபகாலமாக ஒருநாள் தொடர்களிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி வெற்றி எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது இலங்கை அணி. படிப்படியாக சர்வதேச ரேங்கிங்கிலும் முதலிடத்தை நெருங்கி வருகிறது. கடந்த 1996ல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானில் நடந்த உலக கோப்பை தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது.

அதன் பின் கடந்த 2007 உலக கோப்பை போட்டியில் பைனல் வரை முன்னேறி அசத்தியது. ஆனால் இம்முறை தங்கள் அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தற்போதைய கேப்டன் சங்ககரா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

கடந்த 1996ல் கோப்பை வென்றது ஒரு வரலாறு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இதைப்போல மீண்டும் சாதித்து காட்ட விரும்புகிறோம். இம்முறை (2011) உலக கோப்பை போட்டி அட்டவணை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்து "நாக் -அவுட்' நிலையில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள இலங்கை அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளது.

இந்திய துணைக்கண்டத்தில் போட்டிகள் நடக்க இருப்பது எங்களுக்கு சாதமானது. அறிமுகமான ஆடுகளங்களில் விளையாடுவதன் மூலம் கோப்பை வெல்ல மீண்டும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

வீரர்​கள் வயது மோசடி செய்​தால் 2 ஆண்டு தடை

விளை​யாட்டு வீரர்​கள் வயது மோச​டி​யில் ஈடு​பட்​டால்,​ அவர்​க​ளுக்கு இரண்​டாண்டு தடை விதிக்க வேண்​டும் என மத்​திய விளை​யாட்டு அமைச்​ச​கம் அறி​வு​றுத்​தி​யுள்​ளது.

ச​மீ​ப​கா​ல​மாக வயது மோச​டி​யில் ஈடு​பட்டு போட்​டி​யில் பங்​கேற்​பது அதி​க​ரித்து வரு​வ​தால் மத்​திய விளை​யாட்டு அமைச்​ச​கம் சில ஆலோ​ச​னை​களை வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக இந்​திய ஒலிம்​பிக் சங்​கம்,​ தேசிய மற்​றும் மாநில விளை​யாட்டு கூட்​ட​மைப்​பு​கள்,​ இந்​திய விளை​யாட்டு ஆணை​யம் ஆகி​ய​வற்​றுக்கு மத்​திய விளை​யாட்டு அமைச்​ச​கம் வெள்​ளிக்​கி​ழமை ​ எழு​தி​யுள்ள கடி​தத்​தில் கூறப்​பட்​டுள்​ள​தா​வது:​

வீ​ரர்​கள் வயது மோச​டி​யில் முதல் முறை​யாக ஈடு​ப​டு​வது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டால் 2 ஆண்டு தடை​யும்,​ மீண்​டும் அதே தவறை செய்​தால் 5 ஆண்டு தடை​யும் விதிக்க வேண்​டும்.

வ​யது மோசடி செய்​ப​வர்​கள் மீது நட​வ​டிக்கை எடுப்​பது தொடர்​பான தெளி​வான கொள்கை விரை​வில் வகுக்​கப்​ப​டும். ஊக்க மருந்து எடுத்​துக் கொள்​வது எப்​படி குற்​றமோ,​ அதே போல வயதை மாற்றி பங்​கேற்​ப​தும் குற்​ற​மா​கும். ஊக்க மருந்து பயன்​ப​டுத்​து​வதை எப்​படி கரு​து​கி​றோமோ,​ அதே போன்றே இதை​யும் கருத வேண்​டும்.

தே​சிய அள​வில் பங்​கேற்​கும் அனைத்து வீரர்​க​ளுக்​கும் அடை​யாள அட்​டையை கூட்​ட​மைப்​பு​கள் வழங்க வேண்​டும். முறை​யான ஆவ​ணங்​களை சரி​பார்த்த பின் அவர்​க​ளது வயது அந்த அட்​டை​யில் குறிப்​பி​டப்​பட்​டி​ருக்க வேண்​டும்.

அ​டுத்த பிப்​ர​வரி முதல் இத்​த​கைய அடை​யாள அட்டை இருந்​தால்​தான் தேசிய மற்​றும் மாநில அள​வி​லான போட்​டி​க​ளில் வீரர்​கள் பங்​கேற்க முடி​யும்.

மோ​ச​டி​யைத் தடுப்​ப​தற்​காக தேசிய மற்​றும் மாநி​லப் போட்​டி​க​ளில் பங்​கேற்​கும் வீரர்​க​ளின் வய​துச் சான்​றி​தழ்​களை கூட்​ட​மைப்​பு​கள் பாது​காத்து வைத்​தி​ருக்க வேண்​டும். அவ்​வப்​போது வயது சரி​பார்ப்பு பணி​யை​யும் மேற்​கொள்ள வேண்​டும்.

வீ​ர​ரின் வயது குறித்து சந்​தே​கம் ஏற்​பட்​டால் மருத்​து​வப் பரி​சோ​தனை மேற்​கொள்​ளப்​பட வேண்​டும். இது முறை​யாக அந்த வீர​ருக்கு அறி​விக்​கப்​பட வேண்​டும்.

ப​ரி​சோ​தனை குறித்து வீர​ருக்கு சந்​தே​கம் ஏற்​பட்​டால்,​ அவ​ருக்கு வய​துப் பரி​சோ​த​னைக்கு மீண்​டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்​டும் என விளை​யாட்டு அமைச்​ச​கம் அறி​வு​றுத்​தி​யுள்​ளது

தோனி சந்திப்பை தவிர்த்தது ஏன்?

கடந்த ஆண்டு போல் தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்கவே, கேப்டன் தோனியை இம்முறை சந்திக்கவில்லை,'' என, கான்பூர் ஆடுகள பராமரிப்பாளர் ஷிவ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல், 2008ல் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. மூன்று நாளில் முடிந்த இப்போட்டியில் இந்தியா வென்றது.

பின், கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள், கிரீன் பார்க் ஆடுகள பராமரிப்பாளர் ஷிவ் குமாரை சந்தித்து, 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கினர். இது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டதற்காக கொடுத்த பரிசு என்று விமர்சிக்கப்பட்டது.

இதே மைதானத்தில் இந்திய அணி, நேற்று முன்தினம் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதுகுறித்து ஷிவ் குமார் கூறியது: கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது.

இம்முறை அப்படி நடந்து விடக்கூடாது, அதே நேரம் போட்டி "டிராவிலும்' முடிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாம் சேர்ந்து ஒருவித பதட்டத்தை ஏற்படுத்த, நெருக்கடிக்கு ஆளானேன். இருப்பினும் சிறந்த ஆடுகளத்தை அமைக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லாம் சிறப்பாக அமைந்து விட்டது.


எதிர்பார்த்தது நடந்தது:

இந்திய அணி முதலில் பேட் செய்த போது சேவக் முதல் 19 பந்துகளில் வழக்கத்திற்கு மாறாக 3 ரன்கள் தான் எடுத்திருந்தார். ஆனால் முதல் ஒருமணி நேரத்திற்கு பின் பேட்டிங் எளிதாக இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன். முதலில் தப்பி பிழைத்த சேவக், பின் இலங்கை பந்துவீச்சை விளாசித் தள்ளி, சதம் கடந்தார்.


கவாஸ்கர் பாராட்டு:

போட்டி நடந்து கொண்டிருந்த போது வர்ணனையாளர் அறைக்கு ஒருமுறை சென்றேன். அப்போது அங்கு இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர்,"இந்தியாவில் உள்ள சிறந்த டெஸ்ட் ஆடுகளங்களில் இதுவும் ஒன்று,' என தெரிவித்தார். இந்த ஒரே பாராட்டு எனக்கு போதும். அது நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும்.


அன்பளிப்பு பிரச்னை:

கடந்த ஆண்டு போட்டி முடிந்ததும் தோனி தந்த அன்பளிப்பு குறித்து பிரச்னை ஏற்பட்டது. அந்த சம்பவம் இன்னும் என்மனதில் அப்படியே உள்ளது. அதனால் தான் இம்முறை தோனியை சந்திப்பதை தவிர்த்தேன். நான்கு நாட்களில் போட்டி முடிந்தும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருந்தது குறித்து மகிழ்ச்சி. இம்முறை அன்பளிப்பு கிடைத்ததா இல்லையா என்பது குறித்து கேட்கவேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது.


முடிவுக்கு மகிழ்ச்சி:
பொதுவாக தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்கள் முடிவை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் வகையிலும், முடிவை தருகிறவாறும் மைதானத்தை தயார் செய்ய வேண்டும். கிரீன் பார்க் மைதானத்தில் அதிக போட்டிகள் சோர்வைத் தரும் வகையில் "டிரா' ஆகியுள்ளது. இப்போது கடந்த 5 போட்டிகளில் 4 ல் முடிவு ஏற்பட்டுள்ளது.

3-வது டெஸ்​டுக்கு கம்​பீர் இல்லை

மும்​பை​யில் டிசம்​பர் 2-ம் தேதி தொடங்​கும் இலங்​கைக்கு எதி​ரான கடைசி டெஸ்​டுக்​கான அணி வெள்​ளிக்​கி​ழமை அறி​விக்​கப்​பட்​டது.

கெü​தம் கம்​பீ​ரின் சகோ​தரி திரு​ம​ணம் டிசம்​பர் 3-ம் தேதி நடை​பெ​று​வ​தால் இந்த டெஸ்​டில் அவர் பங்​கேற்க மாட்​டார் என இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யச் செய​லர் என்.சீனி​வா​சன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளார். மற்​ற​படி கான்​பூ​ரில் விளை​யா​டிய அணி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​ட​வில்லை.

அணி விவ​ரம்:​ தோனி ​(கேப்​டன்)​,​ சேவாக்,​ சச்​சின்,​ திரா​விட்,​ லட்​சு​மண்,​ யுவ​ராஜ் சிங்,​ ஹர்​ப​ஜன்,​ அமித் மிஸ்ரா,​ ஜாகீர் கான்,​ இஷாந்த் சர்மா,​ எம்.விஜய்,​ பிரக்​யான் ஓஜா,​ ஸ்ரீசாந்த்,​ எஸ்.பத்​ரி​நாத்

நம்பர் ஒன் இடத்தை பிடித்தது இந்தியா

கான்பூர் டெஸ்டில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா சுழலில் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.


இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.


ஆமதாபாத்தில் நடந்த முதல் போட்டி "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இதில் சேவக், காம்பிர், டிராவிட் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி சதம் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 642 ரன்கள் குவித்தது.


பின்னர் பவுலிங்கில் ஸ்ரீசாந்த்தின் "மிரட்டலான' வேகத்தில் அதிர்ந்துபோன இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 356 ரன்கள் பின்தங்கியிருந்தது.



சமரவீரா ஆறுதல்: இன்று ( 27 ம் தேதி ) நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மாத்யூஸ் (15) வெளியேறினார். பின் பிரசன்னா (29), ஹெராத் (13), முரளிதரன் (29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.



இன்னிங்ஸ் வெற்றி: ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் மெண்டிஸ் (27), யுவராஜிடம் சிக்கினார். பின் வந்த வெலகேதராவை ஓஜா (4) சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து திரும்பினார். சமரவீரா (78) ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இந்தியாவின் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டார்.



"நம்பர்-1' இந்தியா: இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக முதலிடத்துக்கு (122) முன்னேறி அசத்தியுள்ளது. அடுத்த இடத்தில் சிறிய வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவும் (122), மூன்றாவது இடத்தை இலங்கை (117) அணியும் பெற்றுள்ளது.



100வது வெற்றி : இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கான்பூர் வெற்றி, 100 வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100வது வெற்றி பெற்றுள்ள அணிகள் வரிசையில் இந்திய அணி 6 வது இடத்தை பிடித்துள்ளது

சச்சினுக்கு சிறப்பு விருது

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் சச்சின், டிராவிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

பி.சி.சி.ஐ., சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும். இம்முறை 2008, அக்., 1ம் தேதி முதல் 2009, செப்., 30ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விருது வழங்கும் விழா வரும் டிச.,6ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில், 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியதற்காக சச்சினுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட உள்ளது. இதே போல டெஸ்டில் அதிக கேட்ச்(185) பிடித்து உலக சாதனை படைத்ததற்காக டிராவிட்டிற்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.


"சூப்பர்' காம்பிர்:

சர்வதேச அளவில் இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரருக்கான "உம்ரிகர்' விருதை காம்பிர் பெறுகிறார். இவர் 8 டெஸ்டில் 5 சதம் உட்பட 1269 ரன்(சராசரி 84.6) எடுத்துள்ளார். 21 ஒரு நாள் போட்டிகளில் 670 ரன், 8 "டுவென்டி-20' போட்டியில் 177 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு 5 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதை மொகிந்தர் அமர்நாத் பெறுகிறார். இவருக்கு ரூ. 15 லட்ச ரூபாய் அளிக்கப்படும். இதை தவிர ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு சிறந்த அம்பயருக்கான விருது அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை அம்பயர் அமிஷ் சகேபா பெறுகிறார்.

அதிரடி தான் சேவக் "ஸ்டைல்


அதிரடியாக ஆடுவது தான் சேவக்கின் பேட்டிங் "ஸ்டைல்'. அவருக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியது: 
சேவக் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். போட்டிக்கு தகுந்து எப்படி விளையாடவேண்டும் என அவருக்கு நன்கு தெரியும். அதிரடி தான் அவரது "ஸ்டைல்'. சேவக் போன்றவர்கள், நாள் முழுவதும் அல்லது பாதி நாளுக்கு களத்தில் நின்று விளையாட வேண்டியதில்லை. 

அவர் தனது இயற்கையான ஆட்டமுறையில் விளையாடினாலே போதுமானது. அவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என நாம் அவருக்கு சொல்லத்தேவையில்லை. 


அசத்தல் காம்பிர்: காம்பிரும் அசத்தலான ஆட்டக்காரர். போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொண்டு, சிறப்பாக விளையாடுவார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நிலையான "பார்மில்' நீடித்து வருகிறார். தேவைப்படும் போதெல்லாம் சதம் அடித்து, அணியை மீட்கிறார்.


பவுலிங் எடுபடும்: ஆமதாபாத் ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில், கான்பூர் ஆடுகளம் வித்தியாசமாகத் தான் உள்ளது. இருப்பினும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆடுகளம் எப்படி மாறும் என்பதை முன்னதாக தெரிவிக்க இயலாது. 


காலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்பதால், துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவும். இங்கு ஒவ்வொரு நாளும் முதல் ஒரு மணி நேரம் முக்கியமானது. அதன் பின் பேட்டிங் செய்வது எளிது. 


அதேநேரம் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினம். அப்போது ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும். மொத்தத்தில் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். 

இவ்வாறு தோனி தெரிவித்தார்

டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் முன்னேற்றம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னேற்றம் அடைந்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் சச்சின், இலங்கைக்கு எதிரான சதத்தினால் ஒரு இடம் முன்னேறி, 15 வது இடத்தை இங்கிலாந்து வீரர் பீட்டர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஐந்து இடங்கள் முன்னேறிய டிராவிட் 20 வது இடத்திலும், சேவக் 21வது இடத்திலும் உள்ளனர். லட்சுமண், 19 வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இரட்டை சதம் மூலம், இலங்கையின் ஜெயவர்தனா, முதன் முறையாக "நம்பர்-1' இடத்தை பெற்றுள்ளார். இலங்கையின் சங்ககரா, இந்தியாவின் காம்பிர், அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.



பவுலர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் முரளிதரன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஜான்சன் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். இந்தியாவின் ஹர்பஜன் சிங், ஒரு இடம் பின்தங்கி, 6வது இடத்திலும், ஜாகிர் கான் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்

கான்பூர் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகம்

இந்தியா & இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆடுகளம் ரன் குவிப்புக்கு மட்டுமே சாதகமாக இருந்ததால் சர்ச்சை எழும்பியது. இது போன்ற ஆடுகளங்களை அமைத்தால், டெஸ்ட் போட்டி விரைவில் அழிந்துவிடும் என்று பல வீரர்கள் கவலை தெரிவித்தனர். 

இந்நிலையில், கான்பூர் களம் குறித்து பராமரிப்பாளர் ஷிவ் குமார் நேற்று கூறுகையில், ‘கிரீன் பார்க் மைதான ஆடுகளம் முதல் இரண்டு நாட்களுக்கு ரன் குவிக்க ஏற்றதாக இருக்கும். பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும்’ என்றார்.

அசார் தடையை நீக்க கோரிக்கை


அசாருதினுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குமாறு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதின். 99 டெஸ்ட் போட்டிகளில் 6215 ரன்களும், 334 ஒரு நாள் போட்டிகளில் 9378 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இவருக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது. 

அதற்குப் பின் அரசியலில் நுழைந்த இவருக்கு காங்கிரசில் இடம் கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்ட இவர், வெற்றி பெற்றார்.



கோரிக்கை:
 அசாருதினுடன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பல வீரர்கள் தடையிலிருந்து விடுபட்டு விட்டனர். ஆனால் அசார் மட்டும் விடுவிக்கப்பட வில்லை. இதனால் அவரது தடையை நீக்க வேண்டும் என, உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், பி.சி.சி.ஐ.,நிதி கமிட்டி தலைவருமான ராஜிவ் சுக்லா, ஜிதின் பிரசாத், ராஜ் பப்பார் உள்ளிட்ட சிலர், முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சரத்பவாரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.



 இது குறித்து ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" தன் மீதான தடையை நீக்க வேண்டுமென அசார் விரும்புகிறார். சரத்பவாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். இப்பிரச்னைக்கு பி.சி.சி.ஐ., ஆண்டு கூட்டத் தொடரில் முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்,'' என்றார்

ஐ.பி.எல். போட்டி உலக அளவில் பிரபலமாகும்


ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியதாவது:-
 

டெஸ்ட் போட்டி வளர்ச்சிக்கு பதில் வீழ்ச்சியை நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கிறது. இப்போது 4 அல்லது 5 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன.

 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இப்போது மிக பிரபலமாகி வருகிறது. இனி அது உலக அளவிலும் பிரபலமாகும். இந்த போட்டி இந்தியாவில் மட்டும் அல்ல பீஜிங், நியூயார்க், சிட்னி, லண்டன் என பல நகரங்களில் நடப்பதை எதிர்காலத்தில் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்

30 ஆயி​ரம் ரன்​கள் குவித்து சச்​சின் உலக சாதனை

சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் மொத்​தம் 30 ஆயி​ரத்​துக்​கும் அதி​க​மான ரன்​க​ளைக் குவித்து இந்​திய கிரிக்​கெட் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் உலக சாதனை படைத்​துள்​ளார்.



30 ஆயி​ரம் ரன்​களை எடுக்​கும் முத​லா​வது வீரர் சச்​சின் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது. ஆம​தா​பா​தில் நடை​பெற்ற இலங்​கைக்கு எதி​ரான டெஸ்​டின் 2-வது இன்​னிங்​ஸில் சச்​சின் 35 ரன்​களை எடுத்​த​போது அவர் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் 30 ஆயி​ரம் ரன்​கள் எடுத்த முதல் வீரர் என்ற சாத​னை​யைப் புரிந்​தார்.



1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்​டி​யில் அறி​மு​க​மான சச்​சின் தற்​போது கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் 21-ம் ஆண்​டில் நுழைந்​துள்​ளார். 20-வது ஆண்டு நிறை​வைக் கொண்​டா​டும் வகை​யில் அவர் இந்​தப் போட்​டி​யில் சத​ம​டித்து ஆட்​ட​மி​ழக்​கா​மல் இருந்​தார்.



டெஸ்ட் போட்​டி​கள்,​ ஒரு தின போட்​டி​கள்,​ சர்​வ​தேச டி20 போட்​டி​கள் என மூன்​றி​லும் சேர்த்து அவர் தற்​போது 30,065 ரன்​க​ளைச் சேர்த்​துள்​ளார்

நியூசி., விக்கெட் கீப்பர் உலக சாதனை

முதல்தர டெஸ்ட் போட்டிகளில் அதிக "கேட்ச்' பிடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்தின் பீட்டர் மெக்கிலாசன்.

நியூசிலாந்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட அணிகள் பங்கேற்ற முதல்தர டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இப்போட்டியில், வடக்கு மாவட்ட அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கினார் பீட்டர் மெக்கிலாசன்.

இதில் 12 "கேட்சுகள்' (முதல் இன்னிங்ஸ் 6, இரண்டாவது இன்னிங்ஸ் 6) பிடித்து அசத்தினார். இதன் மூலம் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் அதிக "கேட்ச்' பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

இதற்கு முன் ஜிம்பாப்வேயின் வேய்ன் ஜேம்ஸ், ஆஸ்திரேலியாவின் ரோட் மார்ஷ் ஆகியோர் முதல் தர போட்டிகளில் 11 "கேட்ச்' பிடித்து சாதனை படைத்திருந்தனர்

டெஸ்ட் போட்டி: 7 சதவீதமாக குறைந்த ரசிகர்கள்

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கு சுத்தமாக வரவேற்பில்லை. 5 நாட்கள் நடக்கும் இப்போட்டிகளை காண 7 சதவீத ரசிகர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"டுவென்டி-20' கிரிக்கெட் வருகைக்கு பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறைந்து வருகிறது. ஆனால் இந்திய வீரர் சச்சின் கூறுகையில்,"" டெஸ்ட் கிரிக்கெட் தான் அதிக பொழுது போக்கு நிறைந்தது,'' என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) சார்பில் எடுக்கப்பட்ட ஒரு "சர்வேயில்', இந்தியாவில் டெஸ்ட் போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஏழு சதவீதம் மட்டுமே உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து தலா 500 ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவில் 58 சதவீத இந்தியர்கள் "டுவென்டி-20' கிரிக்கெட் தான் தங்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 31 சதவீதத்தினர் ஒருநாள் போட்டிக்கு ஆதரவாக உள்ளனர்.

ஐ.பி.எல்., மோசம்:
இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், மிகவும் பிரபலமான ஐ.பி.எல்., போட்டிகளுக்கு நான்கு சதவீத இந்தியர்கள் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளிலும் சேர்த்து 13 சதவீதம் ரசிகர்கள் தான் டெஸ்ட் போட்டிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். ஆனால் இந்த 3 நாடுகளிலும், ஒருநாள் போட்டிக்கு 36 சதவீத ரசிகர்கள் ஆதரவு தந்துள்ளனர்.



"டுவென்டி-20' தான் காரணம்:
டெஸ்ட் போட்டியின் மீது இருந்த ஆர்வத்தை, "டுவென்டி-20' கிரிக்கெட் வந்த பிறகு குறைத்து விட்டதாக 58 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்கா (23 சதவீதம்) மற்றும் நியூசிலாந்து (13 சதவீதம்) ரசிகர்களும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களும், தென் ஆப்ரிக்க மக்களும் மற்ற போட்டிகளை விட "டுவென்டி-20' கிரிக்கெட், அதிக ஆர்வத்தை தூண்டுவதாக தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பு இம்மாதத்தில் துபாயில் நடக்க இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) சமர்ப்பிக்கப்பட உள்ளது. தவிர, டெஸ்ட் விளையாடும் நாடுகளின் முக்கிய கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்திலும், இந்த "சர்வே' பற்றிய விபரங்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2011 உலக கோப்பையை தெண்டுல்கர் பெற்று தருவார்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுவர் சச்சின் தெண்டுல்கர். சமீபகாலங்களில் அவரது ஆட்டத்திறன் மேலும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் ஓய்வு பெறுவார் என்ற யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று தெண்டுல்கர் திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் அவர் அடித்த அதிரடியான ஆட்டத்தை பார்த்து 2015-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாட முடியும் என்று டோனி கருத்து தெரிவித்து இருந்தார்.

தெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய 5 உலக கோப்பையில் விளையாடி விட்டார். ஆனால் அவரால் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தர முடியவில்லை. இதில் 1996-ம் ஆண்டு நல்ல வாய்ப்பு இருந்தது. அரை இறுதியில் இலங்கையிடம் தோற்றதால் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை தெண்டுல்கர் பெற்று தருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சசாங் மனோகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, தெண்டுல்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். 20 ஆண்டுகள் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை அவர் பெற்று தருவார் என்றார்

ஐ.பி.எல்., தொடரில் புதிய அணிகள்

வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வரும் 2011ல் நடக்கவுள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கவுள்ளன. பீல்டிங் செய்ய அதிகபட்சம் நான்கு மாற்று வீரர்களை களமிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது "பிங்க்' நிற பந்தை பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து வீரர்கள் அனைவரும் ஐ.சி.சி., லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கவனிக்கப்படுவார்கள். மேலும் ஐ.பி.எல்., அமைப்பு, பி.சி.சி.ஐ.,யின் ஊக்கமருந்து தடை சட்டத்தை கடைபிடிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியும். அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி ஐ.பி.எல்., வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படும். தவிர, ஒவ்வொரு அணியிலும் சில வீரர்களுக்கு வழங்கப்படும் நட்சத்திர அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

21வது ஆண்டில் சச்சின்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று தனது 21வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த இனிமையான தருணத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை(2011) பெற்று தருவதை இவர் இலக்காக கொள்ள வேண்டுமென கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த 1989ல் அறிமுகமான சச்சின், நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். இன்று புதிய இன்னிங்சை துவக்குகிறார்.

30 ஆயிரம் ரன்:
இலங்கைக்கு எதிராக ஆமதாபாத்தில் இன்று துவங்கும் முதல் டெஸ்டில் சச்சின் 30 ஆயிரம் ரன்களை எடுத்து சாதிக்க காத்திருக்கிறார். டெஸ்ட்(12,773 ரன்), ஒரு நாள் போட்டிகளில்(17,178 ரன்) அதிக ரன் எடுத்துள்ள இவர் ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் 10 ரன் எடுத்துள்ளார்.

இன்றைய டெஸ்ட் போட்டியில் 39 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் 30 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம்.


சாதனை களம்:
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு தான் 1987ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நமது கவாஸ்கர், டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதே போல இங்கு 1994ல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ஹாட்லியின்(431) சாதனையை கபில் தேவ்(432) தகர்த்தார். இங்கு 1999ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில், சச்சின் தனது முதல் இரட்டை சதம் அடித்தார். எனவே, இம்முறையும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.


ஒப்பிட முடியாது:

டெஸ்ட் அரங்கில் 21வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சச்சினை பாராட்டி கவாஸ்கர் கூறியது:
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சச்சினை மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது. இத்தனை காலம் விளையாடிய போதும் இவரது ஆட்டத்தில் இளமை இன்னும் மாறவில்லை. 1960க்கு பிறகு தான் கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள துவங்கினேன். எனது இந்த அனுபவத்தில் பார்க்கும் போது சச்சின் தான் மிகச் சிறந்த வீரர்.


பொதுவாக சச்சினுக்கு ஏதாவது இலக்குகளை நிர்ணயிப்பது எனது வழக்கம். இரட்டை சதம் அடிக்க வேண்டும், ஆயிரம் ரன்களை கடக்க வேண்டும், இன்னும் அதிக சதங்கள் எட்ட வேண்டும் என அவரிடம் வற்புறுத்துவேன். தற்போது இந்திய அணிக்கு உலக கோப்பை(2011) பெற்றுத் தர வேண்டுமென உடனடி இலக்கு நிர்ணயித்துள்ளேன். இதனை வென்று தருவார் என நம்புகிறேன்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்

63 வயதில் சதம் விளாசி கின்னஸ் சாதனை

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த 63 வயது இந்திய வீரர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

குஜராத் மாநிலம் உமர்காமை சேர்ந்தவர் நேவிலி வாடியா. 63 வயதாகும் இவர், கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் வதோதராவில் கடந்த மார்ச். 28 ம் தேதி நடந்த மைனர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றார்.

இப்போட்டியில் வாக்ஹோடியா ரோட் மற்றும் ராஜ்தாம் வாட்லி பரிவார் ஆகிய உள்ளூர் அணிகள் மோதின. வாக்ஹோடியா அணி சார்பில் களமிறங்கிய வாடியா, 60 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.

இதில், 3 சிக்சர் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் மிக அதிக வயதில் (63 ஆண்டு 305 நாட்கள்) சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இவரது சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கடந்த 11 ம் தேதி சான்றிதழ் வழங்கியுள்ளது.

கிரிக்கெட்டில் இனவெறியை தடுக்க புதிய விதிமுறைகள்

கடந்தமுறை ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்சுக்கும், ஹர் பஜன்சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதுபற்றி புகார் கூறிய சைமண்ட்ஸ் ஹர்பஜன்சிங் என்னை இனவெறி காட்டி கிண்டல் செய்தார் என கூறினார். இது பெரும் பிரச்சினையை உருவாக்கியது. இதேபோல பல போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் இடையே இனவெறி பிரச்சினை எழுந்துள்ளது.

இதை தடுக்க சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐ.சி.சி.) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதேபோல கிரிக்கெட் சூதாட்டம், ஊழலை தடுக்கவும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

போட்டி காலங்களில் வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

இதுபற்றி ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஹரூன்லார்சன் கூறியதாவது:-

பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்தும், ஆய்வுகள் நடத்தியும் இந்த விதிமுறைகளை வகுத்து உள்ளோம். வீரர்கள் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது என்ற விவரங்களை தொகுத்து உள்ளோம். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இந்த விதிமுறைகள் நட்பு ரீதியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நமது அடுத்த தலைமுறையும் கிரிக்கெட்டை ரசிக்கும்படி கொண்டு செல்வதற்கு இதுபோன்ற விதிமுறைகள் அவசியாகிறது.

தவறாக புரிந்து கொள்ளுதல், குழப்பம், மொழி தெரியாமை ஆகியவற்றாலும் இனவெறி என தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுபற்றியும் விளக்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்