சச்சினிடம் பேட்டிங் பயிற்சிக்கு தயாரா?

ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஒருநாள் முழுவதும் பேட்டிங் பயிற்சி அளிக்க தயார். அந்த பணம் வசதியற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடப்பட உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், சேவை பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது 400 ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார்.

ஒரு வாரம் உதவி: "பிறருக்கு உதவி மகிழுங்கள்' என்ற கொள்கையுடன் நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு (வரும் செப். 27 முதல் அக். 3 வரை) சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் விளம்பர தூதராக சச்சின் உள்ளார். சிறு குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் அதிரடி அறிவிப்பை இவர் வெளியிட்டுள்ளார். இதன்படி தனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் நபருக்கு நாள் முழுவதும், பேட்டிங் பயிற்சி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டி: நவீன காலத்தில் மற்ற எல்லாவற்றையும் விட காலநேரம் முக்கியம். இதை பயன்படுத்த நினைத் தேன். இதன் படி எனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு நாள் முழுவதும், தாராளமாக பேட்டிங் பயிற்சி கொடுக்க உள் ளேன். இதில் சிக்கனப் பேர் வழிகளுக்கு இடமில்லை. நீங்கள் கொடுக்கும் பணம், பின்தங்கிய குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு செலவிடப்படும்.

திருப்தியாக உள்ளது: இவ்வாறு உதவி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நமக்கும் திருப்தியாக இருக்கும். நான் சிறுவயதில் இருந்த போது உதவி பெறும் நிலையில் இருந்தேன். இப்போது கொடுக்கும் இடத்தில் உள்ளேன். அதனால் மகிழ்ச்சியாக கொடுக்கிறேன். இதன் மூலம் மக்களிடையே உதவி செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.

தந்தை காரணம்: எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டதற்கு என் தந்தை தான் காரணம். அவர் எப்போதும் தாராளமாய் நடந்து கொள்வார். வீடுகளுக்கு பேப்பர், பால் பாக்கெட் கொடுக்கும் சிறுவர்களுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்த உதவுவார். இந்த சம்பவம் தான் என்னை, நலவாழ்வுத் திட்டங்களில் ஈடுபடுத்த உதவியது.

என் வழியில் மகள்: எனது மகளும் என்னைப் போல சரியான பாதையில் தான் செல்கிறாள். கடந்த ஆண்டு அவளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தோம். அப்போது அவள், ""இந்த ஆண்டு எனக்கு பரிசுப் பொருள் வேண்டாம். அதற்கு செலவாகும் 200 அல்லது 300 ரூபாயை பணமாக என்னிடம் தாருங்கள். அதனை குழந்தைகள் முன்னேற்றத் திற்கு உதவும் நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எனது பயிற்சியாளர் ராம்காந்த் அர்ச் ரேக்கர் தாராளமாக உதவி செய்வார். பயிற்சிக்கு பின்பு சோர்வாக இருக்கும் போது, எனக்கு தேநீர் உட்பட பல செலவுகளுக்கு ஆகும் பணத்தை கொடுத்து உதவுவார். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்

0 comments:

Post a Comment