பயிற்சியாளராகிறார் அக்ரம்

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டும் போட்டியில் உள்ளார்.

ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ். தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது கட்ட ஐ.பி.எல்., தொடருக்கு பின் பயிற்சியாளர் புக்கானனை அதிரடியாக, அணி நிர்வாகம் நீக்கியது. கேப்டன் மெக்கலமும் அடுத்த தொடரில் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து அணிக்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேவைப்பட்டனர். கேப்டன் பதவிக்கு ஏறக்குறைய மீண்டும் கங்குலி தேர்வு செய்யப்படலாம் எனத்தெரிகிறது. பயிற்சியாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வை அணியின் உரிமையாளர் ஷாருக்கான், கங்குலி, இணைந்து நடத்துகிறார்கள்.

கடந்த 23ம் தேதி நடந்த நேர்முகத்தேர்வில், முன்னாள் இந்திய வீரர் டபிள்யூ.வி.ராமன், ஆஸ்திரேலியாவின் பெவன், இங்கிலாந்தின் டெர்மட் ரீவ் கலந்து கொண்டனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஜான் ரைட் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் இந்த வார இறுதியில் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் புதியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,""கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தில் இருந்து பயிற்சியாளர் பதவிக்கு என்னை அணுகியது உண்மைதான். இதற்காக வரும் வாரம் நடக்கவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வருமாறு ஷாருக்கான் என்னிடம் போனில் தெரிவித்தார்,'' என்றார்.

ஆர்வம் இல்லை: கோல்கட்டா அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் இருக்கும் நான்கு நபர்களில் அக்ரம் இருப்பது உறுதி. ஆனால் அக்ரம் முழுநேர பயிற்சியாளர் ஆவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதற்கு பதில், பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பை மட்டும் அக்ரம் விரும்புவதாக தெரிகிறது

0 comments:

Post a Comment