ரோஜர் பெடரர் சாம்பியன்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டிநகரில் ஏ.டி.பி.,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன்ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் டோகோவிச்சை சந்தித்தார். விறுவிறுப் பான பைனலின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர். இரட் டையர் பைனலில் கனடாவின் டேனியல் நெஸ்டர், செர்பியாவின் நினாட் ஜிமோன் ஜிக் ஜோடி, அமெரிக்காவின் பாப், மைக் பிரையான் ஜோடியை 3-6, 7-6, 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

0 comments:

Post a Comment