இது டிராவிட் விருப்பம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும்,'' என்கிறார் இந்திய வீரர் டிராவிட்.இந்திய அணியின் முன்னணி வீரர் டிராவிட்.

கடந்த 2007ல் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அதிசயமாக மீண்டும் ஒருநாள் அணியில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள டிராவிட், டி.ஒய். பாட்டீல் இணையதளத்தை அறிமுகம் செய்துவைத்து பேசியது:டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் அனைத்து வசதிகளும் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மைதானம் கட்ட ஆரம்பித்தனர். அப்போது ஐ.பி.எல்., தொடர் இல்லை. இதனால் கடந்த ஆண்டு இங்கு நடந்த ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டியிலாவது பங்கேற்க வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு டிராவிட் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment