இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் விருப்பம்

இங்கிலாந்து நாட்டில் இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் ஒரு தின கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

2011-ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கு போட்டிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆட்டங்கள் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் நடத்தப்படவுள்ளன.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை இந்தியா ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடன் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு தின போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக ஐசிசி தலைவர் டேவிட் மார்கனிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அப்போது இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணியை பங்கேற்க வைப்பதாக இஜாஸ் பட்டிடம், டேவிட் மோர்கன் உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment