ஓய்வு பெறும் எண்ணம் எதுவுமில்லை தொடர்ந்தும் விளையாடுவேன்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்காக அழைப்பை எதிர்நோக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீவ் ஹார்மிசன் இந்தத் தொடரில் தான் விளையாட ஆவலாயுள்ளதாகவும் இந்தத் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாய் வந்த செய்திகள் தவறு என்றும் தொடர்ந்தும் விளையாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை. மேலும்,ஆஷஸ் தொடரில் விளையாட விருப்பமாக உள்ளேன் என்பதால் இந்த தொடருடன் நான் ஓய்வுபெறுவேன் என்று பொருளல்ல. அதுபோன்ற எண்ணங்களை நான் கொண்டிருக்கவில்லை. டுர்ஹாம் அணிக்கு ஆடுவதை விரும்புகிறேன்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட பெரும் ஆவலுடன் உள்ளேன் என்றும் ஸ்ரீவ் ஹார்மிசன் பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார்.

இப்போது நான் பந்து வீசும் விதமும் என்னிடம் உள்ள தன்னம்பிக்கையும் எந்த அணிக்கு எதிராக வேண்டுமானாலும் என்னை நான் நிரூபிக்க தயாராக உள்ளேன் என்று கூறவைக்கிறது என்றார்.

ஆனால், இங்கிலாந்து அணி பாரம்பரிய சிந்தனை உள்ள அணியாதலால் ஸ்ருவர்ட் புரோட் என்ற ஒன்றுமில்லாத பந்து வீச்சாளரை தொடர்ந்து அணியில் வைத்துள்ளதாகவும் குறைகூறப்படுகிறது

0 comments:

Post a Comment