இலங்கை - நியூஸிலாந்து போட்டி டிரா

இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் போட்டியை நியூஸிலாந்து டிரா செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ûஸ துவங்கிய நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆனால் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் நியூஸிலாந்து எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்து 299 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. தில்ஷன் அபாரமாக ஆடி 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சங்ககரா 46 ரன்களும், ஜயவர்த்தனே 27 ரன்களும், சமரவீரா 20 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜயவர்த்தன 30 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் நியூஸிலாந்து 413 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்கார் பிளின்னின் விக்கெட்டை குலசேகரா கைப்பற்றினார்.

ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. குப்தில் 17 ரன்களும், டெய்லர் 8 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் போட்டியை நியூஸிலாந்து டிரா செய்யுமா அல்லது தோல்வியைச் சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

0 comments:

Post a Comment