நம்பமுடியாத' ஆஷஸ் வெற்றி:கேப்டன் ஸ்டிராஸ்

எப்போது ஆஷஸ் கோப்பை வென்றாலும், அது நம்பமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியைத் தரும்,'' என இங்கிலாந்துஅணியின் கேப்டன் ஸ்டிராஸ் பெருமிதப்பட்டுள்ளார்.தோல்வி குறித்து குறிப்பிட்ட, ஆஸி., கேப்டன் பாண்டிங்,"அணியில் இளம் வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர்கள் இல்லாததால்தான் தோல்வி அடைந்தோம். மீண்டும் கோப்பை வெல்வோம்' என்றார்.

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் ஓவலில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் கோப்பையை, மீண்டும் கைப்பற்றியது.

இதுகுறித்து தொடர் நாயகன் விருது வென்ற அணியின் கேப்டன் ஸ்டிராஸ் கூறியது:இது வியப்பை ஏற்படுத்திய நாள். கடந்த நான்காவது டெஸ்டில் நாங்கள் தோல்வியடைந்த பின், இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெறுவது எவ்வளவு கடினமானது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் வீரர்கள் இதற்காக கடினமாக போராடினர்.

அந்த நாள் எங்களுக்கு நம்பிக்கை, ஏமாற்றம், கவலை மற்றும் உறுதிப்பாடு என்று அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டதாக இருந்தது.இளம் வீரர்கள் கொண்ட எங்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சரியான முறையில் செயல்படவில்லை. இப்போதுதான் தேறிவருகிறார்கள்.


என்றாலும் முதல் இரண்டு போட்டிக்கு பின் ஸ்டூவர்ட் பிராட் அசத்தலாக செயல்பட்டு அணியின் வெற்றியில் பங்குவகித்தார். இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

பிராட்டுக்கு பாராட்டு: பிராட் குறித்து இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் கூறுகையில்,""பிளின்டாப் ஓய்வு பெறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை, பிராட் உறுதியாக நிரப்புவார்,'' என்றார்.

மீண்டு வருவோம்: தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" போட்டிகளில் அல்லது தொடரில் தோற்பது எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். வார்ன், மெக்ராத் இல்லாத பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியை சரிசெய்து வருகிறோம். அணியில் உள்ள இளம் வீரர்கள், சில டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இங்கு சிறப்பாகவே விளையாடினர். அடுத்த ஆஷஸ் தொடரில் இங்குவந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போது மீண்டும் கோப்பை வெல்வோம்,'' என்றார்.


நான்காவது இடத்தில் ஆஸி.,கடந்த 2003ல் டெஸ்ட் போட்டிக்கு ரேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஆஸ்திரேலிய அணிதான் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு வந்தது. தற்போது ஆஷஸ் தோல்வியால் 8 புள்ளிகளை இழந்துள்ள பாண்டிங் அணி, முதன் முறையாகமுதலிடத்தை இழந்து, (116) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 122 புள்ளிகளுடன் முதலிடத்தில்தென் ஆப்ரிக்காவும், தலா 119 புள்ளிகளுடன் இலங்கை, இந்திய அணிகள், 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.


வீரர்கள் தேர்வில் தவறுஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து ஓய்வு பெற்றஆஸ்திரேலிய பவுலர் வார்ன் கூறுகையில்,"" ஆஸ்திரேலிய அணியினர் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டனர். ஹவுரிட்சை தேர்வு செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பிராட்டின் எழுச்சிதான் தோல்விக்கு காரணம். இது லார்ட்சில் பிளின்டாப் செயல்பட்டது போல் இருந்தது,'' என்றார்

0 comments:

Post a Comment