பிராட்மேனை விட சிறந்த வீரர் சச்சின்
டி20 உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி தேர்வு
சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது
ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு "401'
வாழும் வரலாறு சச்சின்
சச்சின் புதிய உலக சாதனை
உலககோப்பை தொடர் இடமாற்றம்
கைமாறுகிறது ஐ.பி.எல்., அணிகள்
ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால், தங்களது அணிகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தொடரும் பிரச்னை: தற்போது மூன்றாவது தொடர் வரும் மார்ச் 12ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இந்த முறையும் பிரச்னைகள் தொடருகின்றன. ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.
இந்த சர்ச்சை முடிவதற்குள் தெலுங்கானா போராட்டம் காரணமாக ஐதராபாத்தில் நடக்க இருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர அரசு, தொடரை புறக்கணிக்குமாறு தங்களது டெக்கான் அணியை வலியுறுத்தி வருகிறது.
லாபம் இல்லை: இப்படி சர்ச்சைகள் துரத்துவதால் அணிகளின் உரிமையாளர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த முறை போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்டதால் ஒவ்வொரு அணிக்கும் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தங்களது அணியை விற்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சிலர் பெரும்பாலான பங்குகளை விற்க முன்வந்துள்ளனர். பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹீரோ ஹோண்டா நிறுவனம் வாங்க திட்டமிட்டது. இதனை பிரித்தி ஜிந்தா மறுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை "எமர்ஜிங் மீடியா' நிறுவனம் 312 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லி அணியை ஜி.எம்.ஆர்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 395 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கொடுக்கு தயாராக இருக்கிறதாம்.
டில்லி டேர்டெவில்ஸ் அணியின் 30 சதவீத பங்குகளை வாங்க "ஹீரோ ஹோண்டா' நிறுவனம் தயாராக உள்ளதாம். ஐ.பி.எல்., அணிகளை வாங்க சஹாரா இந்தியா, கோத்ரெஜ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
மோடி தந்திரம்: தற்போது யாரும் அணிகளை விற்க முடிவு செய்யவில்லையாம். மூன்றாவது தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில், இது போன்ற செய்திகளை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வேண்டுமென்றே கிளப்புவதாகவும் கூறப்படுகிறது
காம்பிர் தொடர்ந்து "நம்பர்-1'
ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய வீரர் கவுதம் காம்பிர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஹர்பஜன் பின்னடைவு: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 4 இடங்கள் தள்ளப்பட்டு 12வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜாகிர் கான், 6வது இடத்துக்கு முன்னேறினார்.
பவுலிங்கில் ஏமாற்றிய இஷாந்த் சர்மா, 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் உள்ளார். சுழலில் அசத்திய பவுல் ஹாரிஸ் 9வது இடத்துக்கு முன்னேறினார்.
இரண்டாவது, 3வது இடத்தில் முறையே மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), முகமது ஆசிப் (பாகிஸ்தான்) ஆகியோர் உள்ளனர்
இந்தியாவுக்கு 175 பதக்கம்
யாருக்கு கேப்டன் பதவி?
இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்?: சமீபத்தில் சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலககோப்பை பயிற்சி முகாமை புறக்கணித்தனர். இப்பிரச்னையின் போது, அணியின் கேப்டனாக இருந்த ராஜ்பால் சிங், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட வில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக ராஜ்பால் சிங்கின் மீதான நம்பிக்கையை வீரர்கள் இழந்து விட்டனர். இதனால் அவர் உலககோப்பையில் கேப்டனாக நீடிப்பதை வீரர்கள் விரும்பவில்லை. இது ஒரு புறம் இருக்க, 10 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி சார்பாக விளையாடி வரும் பிரப்ஜோத் சிங், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஸ்டைன் வேகத்தில் இந்தியா பரிதாபம்
தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன் வேகத்தில், நிலைதடுமாறிய இந்திய அணி, நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.
பத்ரிநாத் ஆறுதல்: தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பத்ரிநாத், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது.
12 ரன்னுக்கு 6 விக்.,: இந்நிலையில் ஹாரிசின் அபாரமான சுழலில், கேப்டன் தோனி (6), அவுட்டானார். இதன் பின் இந்திய அணியின் வீழ்ச்சி துவங்கியது. ஸ்டைன் பவுலிங்கில், அனல் பறந்தது. இவரது வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய வீரர்கள் ஒருவர் பின், ஒருவராக பெவிலியன் திரும்பினர்.
பத்ரிநாத் (56), சகா (0), ஜாகிர் கான் (2), அமித் மிஸ்ரா (0), ஹர்பஜன் சிங் (8) என வரிசையாக அவுட்டாயினர். கடைசி 12 ரன்கள் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி "பாலோ-ஆன்' பெற்றது.
தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 325 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணியை, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், மீண்டும் "பேட்டிங்' செய்ய அழைத்தார்.
மீண்டும் சொதப்பல்: இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஏமாற்றம். காம்பிர் (1), இம்முறையும் சொதப்பினார். சேவக், 16 ரன்னுக்கு வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (15), முரளி விஜய் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
போராட்டம்: தற்போது இந்திய அணி 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டும் வைத்துள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினமே.
காவஸ்கரின் சாதனையை சமன் செய்தார் காலிஸ்
முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?