நம்பர்-1 இடத்தை இழந்தார் தோனி
திராவிட் மீண்டும் அழைக்கப்பட வேண்டும்
காமன்வெல்த் பாடல்: ரஹ்மான் அறிமுகம்
கோப்பை கைப்பற்றுமா இந்தியா?
முத்தரப்பு தொடரின் பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது. சொந்த மண்ணில் சாதிக்க இலங்கையும் முயற்சிக்கும் என்பதால், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் ஏமாற்றிய நியூசிலாந்து வெளியேறியது. இன்று தம்புலாவில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
"ஒன் மேன் ஆர்மி':இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. சேவக் மட்டும் தனி நபராக போராடி அணியை பைனலுக்கு அழைத்து வந்தார். கடந்த போட்டியில் சதமடித்த இவர், இத்தொடரில் அதிக ரன்கள் (240) எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவர் மீண்டும் ஒருமுறை கைகொடுத்தால், இந்திய அணி எளிதாக கோப்பை வெல்லலாம்.
சொதப்பும் வீரர்கள்:சச்சின், காம்பிர் இல்லாத நிலையில் யுவராஜ் (49 ரன்கள்), ஜடேஜா (37) மற்றும் ரெய்னா (36) ஆகியோர் சொதப்புகிறார்கள். துவக்கவீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை 4 போட்டியில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தவிர, ரோகித் சர்மா, கோஹ்லியும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களை வெறுப்படையச் செய்கின்றனர். இவர்கள் எல்லாம், இன்று எழுச்சி காண வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுவது மிகவும் அவசியம். கேப்டன் தோனி (73) தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அஷ்வின் வாய்ப்பு:அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில் பிரவீண் குமார் (8 விக்.,), நெஹ்ரா (7 விக்.,) இருவரும், இத்தொடரில் நம்பிக்கை தருவது சற்று ஆறுதலான விஷயம். இவர்களுடன் இஷாந்த் சர்மாவும் விக்கெட் வேட்டையில் ஈடுபடுவதால் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து ஏமாற்றுகிறார். இவருக்குப்பதில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.
ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் சர்ச்சை
ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதில் முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மற்றும் பி.சி.சி.ஐ.,செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல்., (இந்தியன் பிரிமியர் லீக்) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப்பை ரூ. 7.25 கோடிக்கு எடுத்தது.
இவரை ஏலத்தில் எடுப்பதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இப்பிரச்னையில் அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏலம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் லலித் மோடி, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை தனியார் "டிவி' ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. இதில், " பாகிஸ்தான் வீரர் தன்வீரை அணியிலிருந்து நீக்க வேண்டாம்.
பிளின்டாப்பை ஏலத்தில் எடுப்பதில் போட்டி வேண்டாம் என்று ராஜஸ்தான் அணியை சமாதானப்படுத்துவதில் நான் மிகவும் சிரமம் பட்டு விட்டேன். ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னையும் சமாதானப்படுத்தி விட்டேன்,' என, செய்தி அனுப்பி இருந்தார். இதற்கு சீனிவாசன்," தங்கள் உதவிக்கு நன்றி' என, பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: சென்னை அணி, பிளின்டாப்பை நேர்மையான முறையில் தான் ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணி, பிளின்டாப்பை ரூ. 5 கோடிக்கு ஏலம் கேட்டது. ஆனால் நாங்கள் 7.25 கோடி ரூபாய்க்கு கேட்டதால் ஏலத்தில் வெற்றி பெற்றோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இப்படியிருக்கும் மோது, லலித் மோடி ஷேன் வார்னை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
வார்ன் என்ன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரா? ஏலத்தில் நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என்பது 100 சதவீதம் உண்மை. ஏலத்தின் போது எங்களிடம் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை பணம் இருந்தது. மற்ற அணிகளிடம் இதை விட குறைவாகவே இருந்தது. அதனால் பிளின்டாப்பை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதே உண்மை. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.
வார்ன் அதிர்ச்சி: இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்ன் கூறுகையில்,"" இப்பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இது போன்ற செயல்களில் எப்போதும் செயல்படாது. எனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை,'' என்றார்.
ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி
சச்சினுக்கு கிடைக்குமா ஐ.சி.சி., விருது
வீரர்கள் கடிதம்: பி.சி.சி.ஐ., மறுப்பு
பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை
உலககோப்பை நெருங்கும் நேரத்தில்
ஆடுகளம் மோசம்: வெளியேறினார் தோனி
இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு
20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்
காத்திருக்கும் சாதனை
ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (442 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (351) உள்ளனர்.
நழுவிய வாய்ப்பு:இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-இலங்கை-நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிக ஒரு நாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் இச்சாதனை படைக்க, இன்னும் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும்.
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் விளையாடும் பட்சத்தில், புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
புதிய சாதனை படைத்தார் சச்சின்
டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.
கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செயகிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலை சிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய
"டாப்-6' வீரர்கள்:
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்
சூப்பர் சிக்சர்
டுவென்டி-20' போட்டிகளில் சிக்சருக்கு பஞ்சமில்லை. வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தால், சிக்சர் மழை பொழிகின்றனர்.
"டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 1100 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 சிக்சர் அடங்கும். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (38 சிக்சர்), வெஸ்ட் இண்டீசில் கிறிஸ் கெய்ல் (34 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் (31 சிக்சர்), டேவிட் வார்னர் (31 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.
கெய்ல் அதிரடி: "டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 10 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் போஸ்மேன் (9 சிக்சர்), பிரண்டன் மெக்கலம் (8 சிக்சர்), இந்தியாவின் யுவராஜ் சிங் (7 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (7 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.
மெக்கலம் அபாரம்: "டுவென்டி-20' அரங்கில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளார். இவர் அதிகபட்சமாக 112 பவுண்டரி அடித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (99 பவுண்டரி), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (90 பவுண்டரி), இலங்கையின் தில்ஷன் (86 பவுண்டரி), மகிலா ஜெயவர்தனா (78 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.