அணியின் முன்னேற்றம் முக்கியம்: கங்குலி

கோல்கட்டா அணிக்கு யார் பயிற்சியாளராக வரப்போகிறார் என்பது பற்றி கவலையில்லை. அணியை சிறப்பான நிலைக்கு கொண்டுவருவது பற்றி தான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்,'' என கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றவர் கங்குலி. முதல் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். பின் இந்த ஆண்டு நடந்த தொடரில் பயிற்சியாளர் புக்கானனின் "வித்தி யாசமான' யோசனையால் பதவி இழந்தார். இந்நிலையில் கோல் கட்டா அணியின் கேப்டன் பதவிக்கு மீண்டும் இவர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வும் நீண்ட காலமாக நடக்கிறது. இதில் புதிது புதிதாக பெயர்கள் தேர்வு செய்யப்படுகிறது. இவ்வரிசையில் கடைசியாக நுழைந்
துள்ளவர் பாகிஸ்தானின் அக்ரம். ஆனால் இதெல்லாம் தனது கவலையில்லை. அணியின் நிலை தான் கவலையாக உள்ளது என்கிறார் கங்குலி.

இதுகுறித்து அவர் கூறியது:கோல்கட்டா அணி நிர்வாகம் பயிற்சியாளர் தேர்வில் ஈடுபட்டு உள்ளது. அணி உரிமையாளர்கள் ஷாருக்கான், ஜாய் மேத்தா இருவரும் எப்படியும் இம்மாத இறுதிக்குள் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்து விடுவார்கள். அவர்கள் இதற்கு சரியான நபரை தேர்வு செய்வது உறுதி. அவர் பிரபலமானவராக இருப்பார் என நம்புகிறோம்.

அணிதான் முக்கியம்: என்னுடைய கவலை எல்லாம் பயிற்சியாளராக யார் வரப்போகிறார் என்பதல்ல. அணியை பற்றித்தான் மிகவும் கவலைப்படுகிறேன். அணிக்காக நிறைய நேரம் செலவழித்து, நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க போகிறேன். கடந்த தொடர்களில் செய்த தவறுகளை மறந்து விட்டு, மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிப் போம்.

முன்னிலையில் ஜான்ரைட்: கோல்கட்டா அணிக்கு பயிற்சியாளர் தேர்வில் ஜான் ரைட் முதலில் நிற்பார். அவர் சிறந்த மனிதர். அவரை தாண்டி வேறு பக்கம் செல்லமாட்டோம். ஏற்கனவே எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது என்னுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார்.

"கிரேட்' அக்ரம்: அதுபோல வாசிம் அக்ரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவருடன் சிறந்த நட்பு உள்ளது. அவர் மிகப்பெரிய பவுலர். ஷாருக்கான் அவரிடம் போனில் பேசியுள்ளார். எனவே அவரும் சிறந்த தேர்வாக இருக்க லாம்.கோல்கட்டா கிரிக்கெட் முன் னேற்ற சங்கத்தின் தலைவராகி உள்ளேன். மாநில அணியின் முன் னேற்றத்திற்கு தகுந்த திட்டங்கள் வைத்துள்ளேன். அவற்றை நடை முறைப்படுத்து வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அப்போது தான் நல்ல நிலைக்கு வர இயலும். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment