இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்
விம்பிள்டன் டென்னிஸ்: தினாரா- வீனஸ் அரையிறுதி மோதல்
இந்தியா முன்னேற்றம்
ரூ. 175 கோடியில் சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிப்பு
யுவராஜ் சதம்; இந்தியா "த்ரில்" வெற்றி
பகலிரவாக டெஸ்ட் ஆட்டங்கள்
ஷரபோவா, ஷுட்லருக்கு அதிர்ச்சி: சானியா மிர்சா தோல்வி
வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
சானியா வெற்றி
சேவாக் இல்லாததே தோல்விக்கு காரணம்: கங்குலி
தோனிக்கு எதிராக ரசிகர்கள்
: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தவறான யுக்திகளை கையாண்ட கேப்டன் தோனிக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். |
சச்சின், ரெய்னா, ஜாகிர் ஓய்வு..இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் "வேகப்புயல்' ஆசிஷ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின், சேவக், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் இடம் பெற்றுள்ளனர். |
தோல்விக்கு ஐ.பி.எல்., காரணம் தோனி-கிறிஸ்டன் மோதல்
20 இடங்கள் முன்னேறினார் சானியா
"எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய வீரர்களிடம் உண்டு'
| |
சூப்பர்-8 அட்டவணை
"டுவென்டி-20' உலக கோப்பை திருவிழா
'சூப்பர் 8' மோதல் இன்று தொடக்கம்
அணியில் சண்டை தொடர்கிறது? பயிற்சிக்கு வரவில்லை சேவாக்
அதிவேக சென்னைப் புயல்
அண்மையில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற ஜி.பி.2 பிரிவைச் சேர்ந்த 'சர்க்யூட் டி கட்டலுன்யா' கார்ப் பந்தய போட்டியில் சரியாக சோபிக்க முடியாததில் அவருக்கு வருத்தமே. ஆயினும், துவண்டு விடாமல் அடுத்தக் கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்!
ஃபார்முலா 1 பந்தயத்துக்கான தகுதிப் போட்டியாகவே 'ஜி.பி. 2' அமைந்துள்ளதால், எல்லோரது பார்வையும் இப்போது கருண் சந்தோக் மீதே விழுந்துள்ளது.
தனது முயற்சிகள் குறித்து குறிப்பிடும் கருண், ''அடுத்த சீசனில் ஃபார்முலா ஒன் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்பதையே நான் இலக்காகக் கொண்டிருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு முழுவதும் ஈடுபடுவேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்.
'பிரிட்டிஷ் ரேசிங் டிரைவர்ஸ் கிளப்'பில் சேரும் அரிய கெளரவத்தைப் பெற்றுள்ள இந்த 25 வயது அதிவேக இளைஞன் இதுவரை புரிந்த சாதனைகள் இதோ உங்கள் பார்வைக்கு...
கருணின் சாதனைகளும் கடந்து வந்த பாதையும்!
2000: இந்திய நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் 7 முறை வென்ற சாதனையாளர். போல் பொஷிசனில் 10 முறை அதிவேகமாக ஓட்டி தேசிய அளவில் சாதனைப்படைத்துள்ளார். இன்னும் அதை முறியடிக்க யாருமில்லை.
2001: இந்திய அணிக்காக மிக இளம் வயதில் பங்கேற்ற முதல் வீரரும் இவர்தான். ஒரே வருடத்தில் 8 முறை வென்றிருக்கிறார். ஆசிய அளவில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரே விரர் இவர் தான் என்று, பிரிட்டிஷ் ஃபார்முலா பந்தயத்திலும் பங்கேற்றார்.
2002: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் 6வதுக்குல் 3 முறை வென்றார். ஓவர் டிரைவ் பத்திரிக்கையின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் அவர் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவர் மட்டும்தான்.
2003: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் 8 முறை வெற்றி பெற்று 19 போடியம் முடித்தவர்ரும், டி-ஸ்போர்ட் முறையில் 24 முறையும், இந்தியா சார்பில் இங்கிலாந்தில் நடந்த சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் பங்கேற்றார்.
2004: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் நிலை ஆட்டக்காராக வந்தவர். இந்திய வீரர்களில் முதல் ஹீரோவான நரேன் கார்த்திகேயனுடன் இவரது ஜோடி நிசான் உலகக் தொடரில் இறுதி சுற்றில் பங்கேற்ற வீரர்களாக வளம் வந்தார்கள்.
2005: இந்தியா நடத்திய ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ரினால்ட் உலகக் தொடர் ஆகிய போட்டிகள் பேங்கேற்ற முதல் வீரரானார்.
2006: ஆசிய ஃபார்முலா ரினால்ட் வீ6 சாம்பியன் போட்டியில் சரித்திர வெற்றி பெற்ற ஒரே இந்தியர், இந்த ஆண்டில் 12 போட்டிகளில் பங்கேற்று 9 போட்டிகளில் வெற்றி பெற்றார். என்.டி.டி.வி. ப்ராஃபிட் விருது பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.
2007: ரெட் புல் ரேஸிங்கில் முதல் வெற்றி வீரர். ஜிபி2 தொடரிலும், ஃபார்முலா சாம்பியன் சிஃப், மற்றும் இத்தாலியன் ஸ்குவாட் துராங்கோ தொடரிலும் பங்கேற்றார். பெல்ஜியத்தில் நடந்த தொடரில் அபார வெற்றி பெற்றவரும் ஆசிய அளவிலும் இவர் மட்டும்தான்.
2008: ஜிபி2 ஆசியா மற்றும் ஜிபி ஐரோப்பா ஆகிய தொடரில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். ஜெர்மனியில் அபாரமாக வெற்றி பெற்றார். சில்வர்ஸ்டோன், மொனாக்கோ மற்றும் துபாயில் நடந்த போட்டியில் போடியம் வரை முடித்தார். ஆஜ் தக், மற்றும் என்.டி.டி.வி. ஃபிராஃபிட் ஆகியவை சார்பில் சிறந்த கார் பந்தய வீரர் விருதை இரண்டாவது முறையாக தட்ட்சி சென்றவர் இவர்தான்.
2009: ஜிபி2 தொடர் மற்றும் ஓசியன் ரேசிங் டெக்னாலஜி ஆகிய தொடர்களில் பங்கேற்றுவருகிறார்.
வரும் செப்டம்பருக்குள் இவர் பங்கேற்கும் தொடர்கள்:
முடிவின்றி செல்லும் இந்தச் சாதனைப் பட்டியலில் விரைவில் ஃபார்முலா 1-ல் இவர் புரியவுள்ள சாதனைகளும் இடம்பெறும் என்று நம்புவோம்!
உலகக் கோப்பையில் முதல் அதிர்ச்சி: இங்கிலாந்தை சாய்த்தது நெதர்லாந்து!
20-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?
| |
தோனி,செவாக்கிடையே பனிப்போர் இந்திய அணியில் கருத்து வேறுபாடு
தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக செவாக் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவரது காயம் குறித்து கப்டன் தோனியிடம் நிருபர்கள் கேட்டபோது,
நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நீங்கள் அணியின் உடலியக்க நிபுணரைக் கேளுங்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் செவாக்குடன் அவருக்கிருக்கும் மோதல் வெளியே தெரியவந்தது.
அணியிலுள்ள ஒரு வீரரின் காயம் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தோனிக்குள்ளது. ஆனால், அவர் அதைத் தட்டிக்கழித்தார். அணி வீரர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேசாமலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
செவாக் உடல் தகுதி இல்லாததை காரணமாக வைத்து அவரை அணியிலிருந்து கழற்ற தோனி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. ரோகித்சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 36 ஓட்டமும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 80 ஓட்டமும் எடுத்தார்.
இது குறித்து தோனி கூறும் போது, ஐ.பி.எல். போட்டியிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் ஒருவர் மட்டுமே தற்போது மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரைத் தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார். இதன் காரணமாக சேவாக்குக்குப் பதிலாக ரோகித்சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்படலாமென்று தெரிகிறது.
செவாக் உண்மையிலேயே உடல் தகுதியில்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டால் சரிதான்.கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழற்றி விட்டால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், செவாக் மாதிரியாக அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் மிகக்குறைவு.
சிறந்த அதிரடி வீரரான அவர் நியூஸிலாந்து தொடரில் ஆடிய விதத்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். ரோகித்சர்மா சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை வைத்துக்கொண்டு அவரை செவாக்குடன் ஒப்பிடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. செவாக்கின் அதிரடி ஆட்டத்தை பொறுத்துத்தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கிண்ணம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை கப்டனுக்கும் துணைக் கப்டனுக்கும் எப்போதும் ஒத்துப்போனது கிடையாது.இதற்கு முன்பு கபில்தேவ்கவாஸ்கர்,அசாருதீன்டெண்டுல்கர்,அல்லது கங்குலிடிராவிட் அல்லது டிராவிட்டெண்டுல்கர் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அவதாரம் எடுக்கிறார் கங்குலி
| |