பயிற்சியில் இந்திய வீரர்கள்

இரண்டு மாத இடைவெளிக்கு பின்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள், நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்பு தோனி தலைமையிலான இந்திய அணியினர் நீண்ட ஓய்வில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் முதல் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியினர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இலங்கையில் முத்தரப்பு ஒருநாள்,தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ்டிராபி தொடர் என வரஇருக்கும் போட்டிகளுக்காக வீரர்கள் தற்போது தயாராகிவருகிறார்கள். இதற்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கியது.

முதல் நாளில் வீரர்களுக்கு உடற்தகுதி சோதனை நடந்தது. இரண்டாவது நாளாக நேற்று 15 வீரர்களும் நீண்ட நாட்களுக்கு பின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்த முகாம் நாளை முடிவடைகிறது.

இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில்,""நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும் வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முயற்சிக்கும். நடக்கவுள்ள கார்பரேட் டிராபி தொடர், இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு நல்ல பயிற்சிக் களமாக அமையும்,'' என்றார்.

மணிப்பூரில் அமைதி :கேல் ரத்னா விருது பெறும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறுகையில்,""மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 2006ல் எனது மாமனார் சுட்டுக் கொல்லப்பட்டார். யார் சுட்டார்கள்? எதற்காக சுட்டார்கள்? என்ற விபரம் இன்று வரை தெரியவில்லை. விருது பெறும் இந்த தருணத்தில்,
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமென பிரார்த்திக் கிறேன். வரும் 2012ல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல் வதே எனது கனவு,'' என்றார்.

சச்சின் உதாரணம்:கேல் ரத்னா விருது பெறும் உற்சாகத்தில் உள்ள ஒலிம்பிக் வெண்கல நாயகன் விஜேந்தர் கூறுகையில்,""உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இது வரை சாதித்தது இல்லை. இக்குறையை வரும் செப்.,1ம் தேதி இத்தாலியில் துவங்கும் உலக குத்துச்சண்டைபோட்டியில் போக்க காத்திருக்கிறேன். நாட்டுக்கு முதல் பதக்கம் பெற்று தருவதே இலக்கு. நான் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனாலும் சச்சினை பார்த்து வியந்திருக்கிறேன். நீண்ட காலமாக விளையாடி வரும் இவர், மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறார். சிறிய சர்ச்சையில் கூட சிக்கியதில்லை. இவரை சிறந்த முன்னுதாரணமாககொள்ளலாம்,''என்றார்.

மல்யுத்தம் அங்கீகாரம்:ஒலிம்பிக் வெண்கல நாயகன் சுஷில் குமார் கூறுகையில்,""ராஜிவ் கேல் ரத்னா விருது மூலம் நாட்டில் மல்யுத்த போட்டிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதை எனது பெற்றோர், பயிற்சியாளர் சத்பால்ஜிக்கு அர்ப்பணிக்கிறேன். காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட்ட நிலையில் இன்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிச்சயமாக பங்கேற் பேன்,'' என்றார்

0 comments:

Post a Comment