உலக கோப்பையில் சாதிப்போம்

அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி சாதிக்கும்,'' என்கிறார் கேப்டன் சந்தீப் சிங்.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது இந்திய ஹாக்கி அணி. இந்தப் பயணம் அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாதிக்க, தன்னம்பிக்கை அளித்துள்ளதாக இந்திய கேப்டன் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:உலககோப்பை தொடருக்கு இந்திய ஹாக்கி அணி, தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் பங்கேற்கும் முன்னணி அணிகளுக்கு இந்தியா அதிர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். வீரர்கள் அனைவரும் முழு உடற் தகுதியுடன் உள்ளனர்.

தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராசா, பயிற்சியாளர் ஹரேந்திர சிங் இருவரும் உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தி வருகின்றனர். ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற நான்கு டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது பற்றி வருத்தம் இல்லை.

தொடர்களில் இந்திய அணி எப்படி செயல்பட்டது என்பதே முக்கியம். எங்க ளுக்கு தற்போது பயிற்சி தான் முக்கியம். அந்தப் பயிற்சி ஐரோப்பிய பயணத்தில் நிறைய கிடைத்தது. இவ்வாறு சந்தீப் கூறினார்.

0 comments:

Post a Comment