கோப்பை வென்றது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆறுதல் தேடியது. இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, கோப்பையை வென்றது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஐந்தாவது போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் நசீர் (35), முகமது யூசுப் (43) ஓரளவு நம்பிக்கை தந்தனர். பின்னர் இணைந்த யூனிஸ் கான் (76), மிஸ்பா (73*) ஜோடி இலங்கை பந்துவீச்சை பதம்பார்த்து ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயவர்தனா (31), கண்டம்பி (42*), பண்டாரா (31) ஓரளவு நம்பிக்கை அளித்தனர். இலங்கை அணி 34.2 ஒவரில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமர், நவீத்-உல்-ஹசன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பாகிஸ்தானின் நவீதும், தொடர் நாயகனாக இலங்கையின் துஷாராவும் தேர்வு செய்யப்பட்டனர்

0 comments:

Post a Comment