கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்

இலங்கையில் பாகிஸ்தான் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டின் விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டிகளின்போது சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களை ஈடுபடுத்த சில "புக்கி'கள் (கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபவர்கள்) அணுகியதாகத் தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அணி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அப்துல் காதிர், சர்ஃபராஸ் நவாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னை குறித்து முழு அறிக்கை அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இத்தகவலை அமைச்சக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்

0 comments:

Post a Comment