ஸ்ரீசாந்த் கேப்டன்

கேரளா கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் (கே.சி.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட கேரள அணியை, அந்த மாநில கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வரும் செப்டம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடக்க வுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பெறவில்லை. இதனை யடுத்து, உள்ளூர் போட்டிகளில் முழுகவனம் செலுத்தி திறமையை நிரூபிக்க உள்ளார். ரோகன் பிரேம் துணைக் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார்.இது குறித்து கேரள கிரிக்கெட் சங்க தேர்வுக் குழுத் தலைவர் கோபகுமார் கூறுகையில், இத்தொடருக் கான கேரள அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

0 comments:

Post a Comment