இந்தியா அபார வெற்றி

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் புல்டான் (122), வில்லியம்சன் (40),யங் (20), பியர்டு (20) கைகொடுத்தனர்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சங்வான் 5 விக்கெட் வீழ்த்தினார்.எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரகானே (95) சூப்பர் துவக்கம் கொடுத்தார்.

முரளி விஜய் (2), பத்ரிநாத் (0) ஏமாற்றினர். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 108 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 115 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0 comments:

Post a Comment