3-வது டெஸ்டிலும் வெற்றி பெறுமா இலங்கை?

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்றுவரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பலாம் எனக் கருதி 9 விக்கெட்டுக்கு 425 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்த பாகிஸ்தான், தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையைப் பெற்றுள்ளது.

492 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கை அணி, வியாழக்கிழமை நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது.

7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 309 ரன்களைச் சேர்த்தால் 3-0 என தொடரை வென்ற பெருமையை இலங்கை பெற்றுவிடும். அதற்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுவரை எந்த அணியும் 4-வது இன்னிங்ஸில் 492 ரன்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. ஒருவேளை இலங்கை வென்றால், அது விரட்டிப் பிடித்தலில் உலக சாதனையாகவும் அமையும். இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்துவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2003-ல் மேற்கிந்தியத்தீவுகள் அந்த சிறப்பை பெற்றது.

வலுவான தொடக்கம்: கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கைக்கு, பரணவிதானா- வர்ணபூரா ஜோடி 83 ரன்களைக் குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்தது.

நேர்த்தியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார் தொடக்க வீரர் பரணவிதானா. இவர், 73 ரன்களைச் சேர்த்திருந்தபோது ஆலமிடம் எளிதாக "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 131 ஆக இருந்தபோது வர்ணபூரா 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார். முன்னாள் கேப்டன் ஜயவர்தனே 2 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் சங்கக்கரா 50 ரன்களுடனும், சமரவீரா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் டிக்ளேர்: முன்னதாக பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 425 ரன்களைச் சேர்த்து 2-வது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்தது. 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைச் சேர்த்திருந்தது.

106 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் சோயப் மாலிக், 134 ரன்களுக்கு அவுட் ஆனார். உணவு இடைவேளைக்குச் சற்றுப் பின்னர் இன்னிங்ûஸ முடித்துக் கொண்டது பாகிஸ்தான்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்:

பாகிஸ்தான்: 299 & 425-9 டிக்ளேர் (ஷோயப் மாலிக் 134, மிஸ்பா உல் ஹக் 65, கம்ரான் அக்மல் 74, குல் 46, ஹெராத் 5-157).

இலங்கை: 233 & 183-3வி (பரணவிதானா 73, வர்ணபூரா 31, சங்கக்கரா 50 நாட் அவுட், கனேரியா 2-56)

0 comments:

Post a Comment