டெஸ்டுக்கு அழிவில்லை

"கிரிக்கெட் அரங்கில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ள "டுவென்டி-20' போட்டிகளால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒருபோதும் அழிவில்லை,'' என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து "டுவென்டி-20' போட்டி புதிய அவதாரம் எடுத்து உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), உலககோப்பை "டுவென்டி-20' தொடர்களின் மூலம், இத்தகைய குறைந்த நேர போட்டிக்கு உலக அளவில் மவுசு கூடியுள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியினால் டெஸ்ட் கிரிக்கெட் டுக்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறுகையில், "" டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு, "டுவென்டி-20' போட்டிகளால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. பாரம்பரிய கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நீடிக்கும். மற்ற போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டால் வளம் பெறும். ஒரு அணி மற்றும் வீரரின் முழுதிறமையை வெளிக்கொணரும் மேடையாக டெஸ்ட் கிரிக்கெட் உள்ளது. எனவே, வீரர்கள் இத்தகைய போட்டியை ஒரு பொழுதும் மறந்துவிடமாட்டார்கள்,'' என்றார்

0 comments:

Post a Comment