2-வது முறையாக தொடரை வெல்லுமா? இன்று கடைசி மோதல்

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் தொடரின் கடைசி ஒருதின கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த 3-வது போட்டியில், பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்ததன்மூலம் 2-1 என முன்னிலை பெற்று, தொடரை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது இந்தியக் குழு.

இந்நிலையில் தாயக மண்ணில் குறைந்தபட்சம் தொடரை சமனாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கிறிஸ் கெயில் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி உள்ளது.

இப்போட்டி மழை காரணமாக ஒருவேளை கைவிடப்பட்டாலும் அந்நாட்டில் 2-வது முறையாக இந்தியா தொடரைக் கைப்பற்றிவிடும்.

கடைசியாக 2002-ம் ஆண்டு செüரவ் கங்குலி தலைமையிலான அணி, அந்நாட்டில் 5 போட்டிகள் தொடரை 2-1 என வென்றது. அத் தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment