எதிர்கால கணவருடன்சானியா

இந்திய பெண்கள் டென்னிசின் நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் 83 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை. தற்போது 22 வயதாகும் அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவரை திருமணம் செய்ய இருப்பவர் குழந்தை பருவ நண்பரான சோஹ்ராப்(23). நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு யு.எஸ்., ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சியில்ஈடுபட்டு வருகிறார் சானியா.இம்முறை வித்தியாசமாக அவரது எதிர்கால கணவரும் பயிற்சியில் சானியாவுக்கு உதவுகிறார்.

இதுகுறித்து புதிய மணப்பெண் சானியா மிர்சா கூறியது:நிச்சயத்திற்கு பிறகு நானும் சோஹ்ராப்பும் அதிக நேரங்களை சேர்ந்து செலவிடவே விரும்புகிறோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அடுத்தடுத்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதற்காக நான் அதிக நேரம் மைதானத்தில் தான் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே டென்னிசில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள சோஹ்ராப், என்னுடன் களத்தில் உதவி செய்ய முடிவு செய்துள்ளார்.

பின் தொடர்கிறார்

நான் டென்னிஸ் விளையாடுவதையும், பயிற்சி செய்வதையும் ரசித்து பார்க்கிறார். மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருப்பார். ஆனால் நான் டென்னிஸ் விளையாட துவங்கிய நாளில் இருந்து அவர் என்னை பின் தொடர்கிறார்.

மாற்றம் இல்லை

நிச்சயத்திற்கு பின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டென்னிசை எடுத்துக்கொண்டால் வழக்கம் போல்தான். பெரிய அளவில் மாற்றமில்லை. எனது அம்மாவும், அப்பாவும் என்னைத் தொடர்ந்து வந்து எனக்கு உதவியாக உள்ளனர்.

யு.எஸ்.ஓபனில் சாதிப்பேன்

இன்னும் சிலவாரங்களில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் துவங்க உள்ளது. எனவே இப்போதைக்கு டென்னிஸ் தவிர எந்த நினைவுகளும் இல்லை.கடினமான களத்தில் எப்போதும் சிறப்பாகவே நான் செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்து வரஇருக்கும் 7 வாரங்களும் நான் பிட்னசுடன் இருப்பேன் எனநம்புகிறேன். அப்படி இருந்தால் யு.எஸ்.ஓபன்தொடரில் சாதிக்க முயற்சி செய்வேன். இவ்வாறு சானியா மிர்சா தெரிவித்தார்.இம்மாத இறுதியில் அமெரிக்காபுறப்படுகிறார் சானியா. சோஹ்ராப் தனது படிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

0 comments:

Post a Comment