கிரிக்கெட்டின் எதிர்காலம்...

உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரிமாணம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில்...

ஹாக்கி டெஸ்ட் தொடர்: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி

திறனை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி குழு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 1-3 என தோல்வியைத் தழுவியது. பர்மிங்காமில் புதன்கிழமை இரவு இடைவிடாத மழையினிடையே இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணியினரே ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து பெய்த மழை, இந்திய அணியினரின் திட்டத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. பிற்பாதியில் கோல் அடிக்க சில நல்ல வாய்ப்புகளைப் இந்திய வீரர்கள் பெற்றனர். அதற்கு முன்கள வீரர்களும் தயாராக இருந்தனர்....

செய்னாவுக்கு "தட்டம்மை'

இந்திய பாட்மின்டன் வீராங்னை செய்னா நேவல், தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், செய்னா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ளார் பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல். ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண் டாட, அவருக்கு உடல் நலம் சரியில்லை. தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார் செய்னா. அடுத்த மாதம் ஐதராபாத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்க உள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் செய்னா,...

ஊக்கமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள்: மறுப்பு குழப்பத்தில் பிசிசிஐ

ஊக்கமருந்து ஏஜென்ஸி வகுத்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் தயக்கம் காட்டுவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்பம் அடைந்துள்ளது. இதையடுத்து அவசரக் கூட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் கூட்டியுள்ளது. போட்டிகள் இல்லாத சமயத்திலும் வீரர்கள் தங்களது இருப்பிடத்தை ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை எங்கிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி கூறியுள்ளது. அந்த விதிமுறைகள் அடங்கிய படிவத்தில் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு...

காலிறுதிச் சுற்றில் தீபிகா

சென்னையில் நடைபெற்றுவரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனை தீபிகா பலிக்கல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். போட்டித் தரநிலையில் முதலிடத்தில் உள்ள இவர், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்து வீராங்கனை யாத்ரெப் அடெலை 3-0 என நேர் செட்களில் தோற்கடித்தார். யாத்ரெப் தோல்வியுற்றாலும், 5 எகிப்து வீராங்கனைகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் மான்கான்கர், பரிமித் சிங், பிரனாய் மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் 4-வது சுற்றை எட்டியுள்ளன...

விளையாட்டு விருதுகள் விவரம்

ராஜீவ் காந்தி கேல் ரத்ன: மேரி கோம், விஜேந்தர் சிங், சுசீல் குமார். அர்ஜுன விருது: மங்கள் சிங் சாம்பியா (வில்வித்தை), கே.சினிமோல் பெüலோஸ் (தட களம்), சாய்னா நெஹ்வால் (பாட்மின்டன்), எல்.சரிதா தேவி (குத்துச்சண்டை), தானியா சச்தேவ் (செஸ்), கெüதம் கம்பீர் (கிரிக்கெட்), இக்னேஸ் திர்கே, சுரிந்தர் கெüர் (இருவரும் ஹாக்கி), பங்கஜ் ஷிர்சத் (கபடி), பருல் டி.பார்மர் (பாட்மின்டன்- உடல் ஊனமுற்றோர்), சதீஷ் ஜோஷி (துடுப்புப் படகு), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்), பெüலமி கடக் (டேபிள் டென்னிஸ்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), ஜி.எல். யாதவ் (பாய்மரப் படகு). தியான்சந்த்...

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' அதிரடி: அட்டவணை அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக் கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரூ, ஐதராபாத் மற்றும் டில்லியில் போட்டிகள் நடக்க உள்ளன. பைனல், ஐதரா பாத்தில் நடக்கிறது. உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் மோத உள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு, முதலாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கவிருந்தது. ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இத்தொடர் கைவிடப் பட்டது. தற்போது இரண்டாவது தொடர் வரும் அக். 8 ம் தேதி இந்தியாவில் நடக்க உள்ளது. 12 அணிகள்: மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன....

தொடர்ந்து தோனி "நம்பர்-1'

ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிக்கான புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தோனி 828 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் யுவராஜ் (784) இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (767) பிடித்துள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சேவக் (732), ஏழாவது இடத்தில் உள்ளார். சச்சின், காம்பிர் முறையே 15 மற்றும் 16 வது இடங்களை பெற்றுள்ளனர். சிறந்த டெஸ்ட் அணிகள் பட்டியலில்...

ஐ.பி.எல். போட்டி இங்கிலாந்து வீரர்கள் விலகல்?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. இது வரை இரண்டு ஐ.பி.எல். போட்டி நடந்துள்ளது. முதல் போட்டி கடந்த ஆண்டு இந்தியாவிலும், 2-வது போட்டி இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களால் ஆட முடியாத நிலை ஏற்படும். ஒவ்வொரு நாட்டு வாரியத்துடனும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2012-20 ஆண்டு வரை ஒவ்வொரு நாடும் விளையாடும் டெஸ்ட், ஒருநாள் போட்டி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து...

தொடர்ந்து சிக்கலில் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர், அணி நிர்வாகத்தை விமர்சித்து புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார். கடந்த 2008ல் அக்தர் பாகிஸ் தான் கிரிக்கெட் விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதத்தை எதிர்த்து இன்னும் கோர்ட் படியேறிக் கொண்டு உள்ளார். இதன் காரணமாகவே அணியிலும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். உடற் தகுதியை காரணம் கூறி உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், இலங்கைத் தொடரில் அக்தர் சேர்க்கப்படவில்லை. தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி (மினி உலககோப்பை) தொடருக்கான உத்தேச அணியிலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை. உடற்தகுதி கேள்வி:...

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் : ஹைடன் உறுதி

ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்,' என ஹைடன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன். தற்போது ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் கிரிக்கெட் அகாடமி துவங்க திட்டமிட்டிருக்கும் அவர், தொடர்ந்து ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் என்கிறார். இதுகுறித்து ஹைடன் கூறியது:சென்னை சூப்பர் கிங்ஸ், "டுவென்டி-20' போட்டிகள் என சென்னை, என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையகத்தை கூட இங்கு அமைக்கலாம். ஐ.பி.எல்., தொடரில்...

இந்திய கிரிக்கெட் சபையைத் தவறாகக் கூறவில்லை முன்னாள் கப்டன் கங்குலி "பல்டி' அடித்தார்

வீரர்கள் தேர்வில் இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) பாரபட்சம் காட்டியதாக தான் ஒருபோதும் கூறவில்லை என சவுரவ் கங்குலி அந்தர் பல்டி அடித்துள்ளார்.ஓய்வு தொடர்பாக தான் சொன்ன கருத்துகளை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.தனது சொந்த முடிவின் படியே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதாக கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். சமீபத்தில் பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர்,பி.சி.சி.ஐ. மீது கடுமையாகச் சாடினார். சச்சின்,ராவிட்...

வீரர்கள் திட்டம்: கிறிஸ்டன் எச்சரிக்கை

பிளின்டாப் வழியில் மற்ற வீரர்களும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் பங்கேற்று அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்,'' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண் டுள்ளது என்ற கருத்து உள்ளது. இந்நிலையில் வீரர்களின் இதுபோன்ற செயல்களால் ரசிகர்கள், சிறந்த வீரர்களின் ஆட்டத்தை காணமுடியாமல் போகிறது. இதுகுறித்து...

இந்தியாவில் உலககோப்பை உறுதி

பாதுகாப்பு குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) முழு திருப்தி அளித்துள்ள நிலையில், உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள்) அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலககோப்பை ஹாக்கி தொடர், அடுத்த ஆண்டு (2010) இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் 7 ம் தேதி முதல் 20 ம் நடக்க உள்ளது. இருப்பினும் பாதுகாப்பு பிரச்னைகளின் காரணமாக இத்தொடரை மலேசியாவில் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வந்தது.ஆனால் இந்தியாவில் இத்தொடர் நடப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின்...

எதிர்கால கணவருடன்சானியா

இந்திய பெண்கள் டென்னிசின் நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் 83 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை. தற்போது 22 வயதாகும் அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவரை திருமணம் செய்ய இருப்பவர் குழந்தை பருவ நண்பரான சோஹ்ராப்(23). நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு யு.எஸ்., ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சியில்ஈடுபட்டு வருகிறார் சானியா.இம்முறை வித்தியாசமாக அவரது எதிர்கால கணவரும் பயிற்சியில் சானியாவுக்கு உதவுகிறார். இதுகுறித்து புதிய மணப்பெண் சானியா மிர்சா கூறியது:நிச்சயத்திற்கு பிறகு நானும்...

சாம்பியன் லீக் "T20' போட்டிக்கான மைதானங்கள்

அக்டோபர் 8 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறும் சாம்பியன் லீக் "இருபதுக்கு 20' கிரிக்கெட் போட்டிகள் டில்லி, பெங்களூர், ஹைதராபாத் மைதானங்களில் நடைபெறுமென்று சாம்பியன் லீக் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.இந்த சாம்பியன் லீக் "2020' கிரிக்கெட் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். "இருபதுக்கு20' இரண்டாவது தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் தோல்வியடைந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 2009 லீக் சீசனில் அதிக போட்டிகளை வென்ற டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் இதிலடங்கும்.அவுஸ்திரேலிய உள்நாட்டு "2020' கிரிக்கெட் தொடரில் இறுதியில்...

ஐடிஎஃப் டென்னிஸ்: பட்டம் வென்றார் சானியா

அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டனில் நடைபெற்ற் ஐ.டி.எஃப். சாலஞ்சர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் சானியா மிர்சா வென்றுள்ளார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு வீராங்கனை ஜூலி காயினை 7-6,6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் போட்டித் தரநிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சானியா. காயின் இப் போட்டிக்கான தரநிலையில் முதலிடத்தில் இருந்தார். காயினை வீழ்த்தியதன் மூலம் உலக ஒற்றையர் டென்னிஸ் தர வரிசையில் 83-வது இடத்திலிருந்து 80-வது இடத்துக்கு சானியா முன்னேறியுள்ளா...

இந்திய கிரிக்கெட் சபை மீதான கங்குலியின் குற்றச்சாட்டால் சர்ச்சை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இந்தியாவின் சிறந்த கப்டன் சௌரவ் கங்குலி, பி.சி.சி.ஐ.விதிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட்டிற்கு இன்னும் சிறிது காலம் நல்ல முறையில் சேவையாற்றியிருக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.வங்காள மொழி தொலைக்காட்சி சனலில் பேசிய அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.சக வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கங்குலி தானும் இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த...

அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்

அடுத்த பத்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்' என இங்கிலாந்து வீரர் பீற்றர்சன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் பீற்றர்சன் பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இவர் கூறியதாவது;சில மாதங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகள் எப்போதும் நீடித்திருக்குமென நினைத்தேன்.ஆனால், தற்போது பார்த்தால் சிறப்பான வீரர்கள் கூட டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கிறார்கள்.ஆனால், இவர்கள் பணம் கொழிக்கும் "ருவென்ரி20' போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவிக்கிறார்கள்.இது...

ஸ்ரீசாந்த் கேப்டன்

கேரளா கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் (கே.சி.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட கேரள அணியை, அந்த மாநில கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடக்க வுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பெறவில்லை. இதனை யடுத்து,...

திறமையான வீரர்களைக் கண்டறிய தமிழகத்தில் ஹேடன் சுற்றுப்பயணம்

திறமையான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவதற்காக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹேடன் தமிழகத்தில் செப்டம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார். திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 51 - வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது: 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலத்தில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பல்வேறு நிலைகளில் 458 போட்டிகள் நடத்திருப்பது பாராட்டுக்குரியது. சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களைக்...

பைனலில் சானியா

சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறினார்.அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் சானியா, சீனாவின் மெங் யுவானை சந்தித்தார். முதல் செட்டை சானியா 6-1 என மிகச் சுலபமாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட சீன வீராங்கனை மெங் 6-4 என பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா 6-4 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில்...

6 ஆண்டுகளில் முதன் முறையாக

லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராண்ட் பிரீ தட களப் போட்டியில் போல்வால்ட் ஜாம்பவான் ரஷியாவின் இசின்பயேவா பட்டம் வெல்ல முடியாமல் போனார். போல்வால்ட் போட்டிகளில் பலமுறை உலக சாதனையை புதுப்பித்துக்கொண்டுள்ள இசின்பயேவா, போலந்து வீராங்கனை அன்ன ரோகெüஸ்காவிடம் முதலிடத்தை இழந்தார். இருவரும் 4.68 மீட்டர் உயரம் தாண்டினர். ஆனால் இசின்பயேவா தனது கடைசி வாய்ப்பிலேயே அதை எட்டினார். இதையடுத்து இரண்டாம் இடத்துடன் அவர் திருப்தி அடையவேண்டியதாயிற்று. "எதிர்பாராத இம்முடிவால் சற்று ஏமாற்றம் அடைந்தேன். அது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. என்றாலும் உலகப் போட்டிக்கு...

இடம் இருக்கிறது... மனம் இல்லையே...!!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன. தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. மேற்கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அத்தியாவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அந்த விளையாட்டுகளுக்கான மாநிலச் சங்கங்கள் செயல்பட அலுவலகம்கூட...

இரட்டை மகிழ்ச்சியில் பெடரர்

டென்னிஸ் "சூப்பர் ஸ்டார்' ரோஜர் பெடரர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் திகழ்கிறார். ஒற்றையர் பிரிவில் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்துள்ளார். உலகின் "நம்பர்-1' வீரரான இவர், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உற்சாகத்தில் காணப்படுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" எனது மனைவி மிர்காவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாள். மனைவி மிர்கா, குழந்தைகள் சார்லின் ரிவா, மைலா ரோஸ் ஆரோக்கியமாக உள்ளனர்,''...

ஆஸ்திரேலியாவுடன் ஒருதின தொடர்: ஜெய்ப்பூரில் முதலாவது போட்டி

ஏழு போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது: இந்தியாவுடன் ஒருதின தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அக்டோபர் 21-ம்தேதி இந்தியா வருகிறது. ஜெய்ப்பூரில் அக்டோபர் 25-ம்தேதி முதலாவது போட்டியில் பங்கேற்கிறது. கடைசிப் போட்டி மும்பையில் நவம்பர் 11-ம்தேதி நடைபெறுகிறது. குவாஹாட்டியில் நவம்பர் 8-ம்தேதி நடைபெறும் 6-வது போட்டியைத் தவிர மற்றைய ஆட்டங்கள் அனைத்தும் பகலிரவாக நடைபெறும். மும்பையிலிருந்து நவம்பர் 12-ம்தேதி ஆஸ்திரேலிய அணி தாயகம்...

இந்தியா அபார வெற்றி

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் புல்டான் (122), வில்லியம்சன் (40),யங் (20), பியர்டு (20) கைகொடுத்தனர்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சங்வான்...

செல்வாக்கு இருந்தால் நேரு ஸ்டேடியத்தில் அலுவலகம்?

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்டிஏடி) அங்கீகாரம் பெற்ற பல்வேறு விளையாட்டுகளின் மாநிலச் சங்கங்கள், முறையான அலுவலகம் இல்லாமல் திணறிவருகின்றன. தேசியப் போட்டிகளுக்குச் செல்லும் பல்வேறு விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தும் தலையாய பொறுப்பை எஸ்.டி.ஏ.டி. கொண்டுள்ளது. பாரம்பரியம் வாய்ந்த கபடி விளையாட்டிலிருந்து சைக்கிள் போலோ வரை 51 வகையான விளையாட்டுகள் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் அவசியமான போட்டிகளைக்கூட நடத்த முடியாமல் திணறிவருகின்றன. அவற்றுக்கு மாநிலச் சங்கத்தை செயல்படுத்த அலுவலகம்கூட இல்லை என்பது...

3-வது டெஸ்டிலும் வெற்றி பெறுமா இலங்கை?

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்றுவரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பலாம் எனக் கருதி 9 விக்கெட்டுக்கு 425 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்த பாகிஸ்தான், தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையைப் பெற்றுள்ளது. 492 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கை அணி, வியாழக்கிழமை நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது. 7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை...