காவஸ்கருக்காக சதம் அடிப்பேன்: ஹர்பஜன்

இந்தியாவின் பேட்டிங் மாஸ்டர் சுநீல் காவஸ்கரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய சதம் அடிப்பேன் என பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நீ எப்போது சதம் அடிக்கப் போகிறாய் என மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காவஸ்கர் என்னிடம் கேட்டார். அவரது ஆசையை விரைவில் பூர்த்தி செய்வேன்.

ஆட்டத்தில் நெருக்கடி ஏற்படுவதை நான் விரும்புவேன். நம்மிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் எனும்போதுதான் சிறப்பாக விளையாட ஊக்கம் பிறக்கிறது. சவால்களே என்னை மேலே உயர்த்துகின்றன.

தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும்போது ஷான் போலக் போன்ற ஆல்ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment