நியூஸிலாந்து வீரர் ரைடருக்கு அபராதம்

நியூஸிலாந்து வீரர் ஜெஸ்ஸி ரைடருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோஹன்னஸ்பர்க்கில் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 74 ரன்களைக் குவித்த ரைடர் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்பிய வேளையில் டிரஸ்ஸிங் ரூமிலிருந்த நாற்காலியை தனது கிரிக்கெட் மட்டையால் உடைத்தார்.

இது சர்வதேச கிரிக்கெட் விதிகளை (ஐசிசி) மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து ஜெஸ்ஸி ரைடருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வாங்கிய ஊதியத்தில் இருந்து 15 சதவீத தொகையை அபராதமாக செலுத்தவேண்டும் என்று போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது

0 comments:

Post a Comment