ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடுவேன்: சேவாக்

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார்.

இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு தினத் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்குள் நான் முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இடம்பெறுவேன்.

உடல்ரீதியாக நான் இன்னும் முழுதுமாக தயாராகவில்லை. பெüண்டரி எல்லையிலிருந்து என்னால் பந்தை எறியமுடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் நான் தயாராகிவிடுவேன்.

இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் போட்டி, ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. துணை கேப்டன் பதவியில் எனக்கு விருப்பமில்லை. என்னை விட இளைஞராக உள்ள வீரருக்கு அதை வழங்கலாம். இதன்மூலம் நான் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என்றுதான் நான் கூறியிருந்தேன். அதை இப்போதும் கூறுகிறேன். கேப்டன் பதவிக்கு நான் என்றும் ஆசைப்பட்டதில்லை என்றார் அவர்

0 comments:

Post a Comment