யுவராஜ் இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு

இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறினார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடன் தோல்வியுற்றதால் மட்டும் இந்தியாவை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு திறமை படைத்தது இந்திய அணி.

தற்போதுள்ள நிலையில் போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதாக கூறிவிட முடியாது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் முடிவில் மட்டுமே இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். சச்சினும், யுவராஜ்சிங்கும் இந்திய அணியின் சொத்து.

இக்கட்டான நேரங்களில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள் சச்சின், யுவராஜ் சிங்.

ஆனால் முன்பிருந்தது போல கேப்டன் தோனியிடமிருந்த நம்பிக்கை தற்போது இல்லை என்றார் அவர்

0 comments:

Post a Comment