ஹர்பஜனுக்கு ரூ. 3000 அபராதம்

பதிவு எண் இல்லாமல், தனது "ஹம்மர்' சொகுசு காரை பயன்படுத்திய ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிசுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர், சமீபத்தில் ரூ. ஒருகோடி மதிப்பிலான "ஹம்மர்' சொகுசு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். "கார்பரேட் டிராபி' கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஹர்பஜன், "ஹம்மர்' காரில் நேற்று முன் தினம் ஜலந்தரிலிருந்து சண்டிகர் வந்தார்.

காரில் பதிவு எண் இல்லை. இதனை கவனித்த சண்டிகர் டிராபிக் போலீஸ் நிர்வாகம், ஹர்பஜனுக்கு அபராதம் விதித்தது. இது குறித்து சண்டிகர் டிராபிக் போலீஸ் எஸ்.பி., டூன் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் சரி. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான்.

ஹர்பஜன் மட்டுமல்ல, வேறுயாராவது பதிவு எண் இல்லாமல் காரை ஓட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்,'' என்றார்.இதற்கு முன்: ஹர்பஜனுக்கு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்து பிரச்னை ஏற்படுத்தினார்.

பிரபல மதுபான விளம்பரத்தில் நடித்ததால் பிரச்னையை எதிர்கொண்டார். தவிர, "டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவருடன் இணைந்து நடனமாடினார். இது அவர் சார்ந்த சமுதாய மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனதுசெயலுக்கு மன்னிப்புக் கேட்டு தப்பித்தார். தற்போது தான் வாங்கிய ஹம்மர் சொகுசு காரின் மூலம் புதிய பிரச்னையை சந்தித்துள்ளார்

0 comments:

Post a Comment