ஊக்க மருந்து சோதனை : ஐ.சி.சி., புதிய முடிவு

ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் இந்தியாவின் நெருக்கடிக்கு ஐ.சி.சி., பணிந்துள்ளது. கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேகமாக ஒரு விதிமுறை அல்லது சர்ச்சைக்குரிய புதிய விதிமுறையில் சலுகை அளிக்க வேண்டுமென உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2006ல் உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் ஐ.சி.சி., சேர்ந்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறையின் படி, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வீரர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) ஆதரவு தெரிவித்தது. தற்போது இந்தியாவுக்கு சாதகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கருத்து தெரிவித்து உள்ளது.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கத் கூறுகையில்,"" கிரிக்கெட்டுக்கு என்று தனியாக விதிமுறையை ஏற்படுத்த வேண்டும் என உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தை வலியுறுத்த உள்ளோம்.

இதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், புதிய விதிமுறையை தளர்த்தி சில சலுகைகள் அளிக்க வேண்டும். இப்பிரச்னை பற்றி ஐ.சி.சி., செயற்குழுவில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும்,''என்றார்

0 comments:

Post a Comment