கிரிக்கெட் வாரிய கமிட்டியில் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தொழில்நுட்ப கமிட்டியில் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

வாரியத்தின் 80-வது வருடாந்திர பொதுக்குழு மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் வாரியத்தின் தலைவர் சஷாங்க் மனோகர் கூறியதாவது:

சுநீல் காவஸ்கர் தலைமையில் உள்ள வாரியத்தின் தொழில்நுட்ப கமிட்டியில் முன்னாள் நடுவர் வி.கே.ராமசாமி, முன்னாள் வீரர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோருடன் கங்குலியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் அக்டோபர் 25-ல் நடைபெறுவதாக இருந்த ஒரு தின ஆட்டம் வடோதராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

போட்டிகளை நிர்வகிக்கும் நிறுவனமான ஐஎம்ஜியுடனான ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது 7 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். வாரியத்தின் செயல்பாடுகளில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

0 comments:

Post a Comment