கைவிரலில் காயம்: யுவராஜ்சிங் விலகல்

பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யுவராஜ் சிங் வலது கை விரலில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இந்திய அணி வீரர்கள் யுனிவர்சிட்டி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது யுவராஜ்சிங்குக்கு வலது கைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் ஏற்பட்டதையடுத்து அவரை 6 வாரம் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இந்தியா திரும்புகிறார்.

ஏற்கெனவே சேவாக், கம்பீர், ஜாகீர்கான், இர்பான் பதான் ஆகியோர் காயமடைந்து அணியிலிருந்து விலகிய நிலையில் யுவராஜ்சிங்கும் விலகியுள்ளார். இதனால் அணிக்கு பின்னடைவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment