சச்சின், திராவிட்டை சமாளிக்க வியூகம்: யூனிஸ்கான்

இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட்டை சமாளிக்க வியூகம் வகுத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் கூறினார்.

யூனிஸ்கான் காயமடைந்துள்ள நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில் நான் தேறி விடுவேன். வலி நிவாரணி ஊசிகளை செலுத்திக் கொண்டு போட்டியில் பங்கேற்பேன்.

இந்தியா, ஆஸ்திரேலியாவுடனான ஆட்டங்கள் பாகிஸ்தானுக்கு முக்கியமானவை.

ஒரு நாள் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் உள்ளனர். ஆனால் அவர்களைச் சமாளிக்க எங்களது பந்துவீச்சாளர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.

2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டது. பாகிஸ்தான் 270 ரன்கள் எடுத்திருந்தபோதும் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை. அன்றைய தினம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இன்றைய நிலை வேறாக உள்ளது. எப்படியும் இந்தியாவை வெல்வோம் என்றார் அவர்.

0 comments:

Post a Comment