இந்தியாவை வென்றது சீனா

சென்னையில் நடைபெறும் ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா 107-49 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனைகள் எளிதாக இந்தியாவை வீழ்த்தினர்.

இப்போட்டியில் இதுவரை தான் ஆடிய 3 ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.

இதற்கு முன்னர் தென் கொரியாவும், சீன தைபேவும் இந்தியாவை வென்றன.

சனிக்கிழமை நடைபெற்ற மற்ற ஆட்டங்களில், மலேசியா 71-57 என கஜகஸ்தானையும், லெபனான் 96-54 என இலங்கையையும் வென்றன.

பிலிப்பைன்ஸ் 81-73 என உஸ்பெகிஸ்தானையும், ஜப்பான் 94-60 என தாய்லாந்தையும் வென்றன.

இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment