6 பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக 6 பாகிஸ்தான் வீரர்கள் கராச்சி மைதானத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கராச்சி ஜிம்கானா மைதானத்தில் 20-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் தன்வீர் அகமது, ஷாசெத், சோஹைல் கான், ஜாவித் காதிர், நதீஷ் ஷேக், தன்வீர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. மேலும் போட்டி நடுவர்களையும் அவர்கள் திட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போட்டி அமைப்பாளர்கள் 6 கிரிக்கெட் வீரர்களும் கராச்சி ஜிம்கானா மைதானத்தில் விளையாடத் தடை விதித்தனர்.

0 comments:

Post a Comment