வீரர்கள் தேர்வில் தவறு: தோனி

ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமையை அடிப்படையாக கொண்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. இது தவறாகிவிடுகிறது,'' என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதில் யூசுப் பதான் உள்ளிட்ட சில வீரர்கள் பேட்டிங்கில் ஏமாற்றியது திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியது:

உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் உடனடியாக தேசிய அணியில் இடம் பிடிப்பது குறித்து எதிர்பார்க்கிறார்கள். ஆனால் "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஒருநாள் போட்டி.

இது வீரர்களின் பொறுமை சோதிக்கும் போட்டி. முதலில் பவுலிங் செய்யும் போது இருந்த புத்துணர்ச்சியுடன், கடைசிகட்ட ஓவர்களையும் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

தற்போது அணியில் உள்ள யூசுப் பதான், உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் ஆதிக்கம் செலுத்தியவர். ஆனால் சர்வதேச போட்டிகளுக்கு வரும் போது அவரால் ஜொலிக்க முடியவில்லை.

இதுதான் கவலையளிக்கும் விஷயம். இதனால் ஐ.பி.எல்., தொடரை அடிப்படையாக கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment