இரானி கோப்பை: இன்று ஆரம்பம்

இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான 47வது இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான மும்பை அணியை சந்திக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் போல ஐந்து நாட்கள் நடக்கும்.


வருகிறார் சேவக்:

தோள்பட்டை காயம் காரணமாக, சமீபத்திய சர்வதேச தொடர்களில் பங்கேற்காத இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், இரானி கோப்பை தொடரில் பங்கேற்கிறார். இவர் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் கேப்டனாக களமிறங்குகிறார்.

இவருடன் தமிழக வீரர் பத்ரிநாத், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், பிரக்யான் ஓஜா, முனாப் படேல், ஸ்ரீசாந்த், மனோஜ் திவாரி, விரிதிமன் சகா உள்ளிட்டோரும் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி சார்பில் விளையாடுகின்றனர்.


ஜாபர் கேப்டன்:

மும்பை அணியின் கேப்டனாக வாசிம் ஜாபர் விளையாடுகிறார். இவரோடு அஜித் அகார்கர், இக்பால் அப்துல்லா, தவால் குல்கர்னி, ரமேஷ் பவார், அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா உள்ளிட்டோர் மும்பை அணி சார்பில் விளையாடுகின்றனர்.


இருபது முறை:

இரானி கோப்பை தொடரில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை நடந்துள்ள 46 தொடரில் 20 முறை கோப்பை கோப்பை வென்று சாதித்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை (15 முறை), கர்நாடகா (3 முறை), டில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

தமிழகம் (1988-89), ஐதராபாத், அரியானா அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றுள்ளன. கடந்த 1965-66ம் ஆண்டு நடந்த இத்தொடர் மழைகாரணமாக கைவிடப்பட கோப்பையை "ரெஸ்ட் ஆப் இந்தியா' மற்றும் மும்பை அணிகள் பகிர்ந்து கொண்டன.


நேரடி ஒளிபரப்பு:

இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய, நியோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போட்டியை நியோ கிரிக்கெட் சேனலில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை காலை 9.30 மணியில் இருந்து காணலாம்.

தவிர, இந்த நிறுவனம் அடுத்து வரவிருக்கும் சாலஞ்சர் டிராபி (அக். 8-11) மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (அக். 25-நவ. 11) உள்ளிட்ட முக்கிய தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது

0 comments:

Post a Comment