இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

இது பகலிரவு ஆட்டமாக செஞ்சுரியன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டாûஸ வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக கம்ரன் அக்மலும், இம்ரான் நசீரும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நஸீர் 20 ரன்களிலும், கம்ரன் அக்மல் 19 ரன்களிலும் பெவிலியின் திரும்பினர். இந்த விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் யூனிஸ்கானை 20 ரன்களில் அவுட்டாக்கினார் ஆர்.பி. சிங்.

இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷோயிப் மாலிக்கும், முகமது யூசுப்பும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 180-ஐத் தொட்ட பிறகு இருவரும் அதிரடியாக விளையாடினர். மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பெüண்டரி பறந்தது. குறிப்பாக ஸ்லிப் திசையில் பெüண்டரிகளை விரட்டி ஸ்கோரை இருவரும் உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடிய மாலிக் சதமடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த யூசுப்பை 87 ரன்களில் அவுட்டாக்கினார் நெஹ்ரா. 88 பந்துகளில் இந்த ரன்களை அவர் சேர்த்தார். மாலிக் - யூசுப் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஷாகித் அப்ரிதி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மாலிக் 128 ரன்களில் வீழ்ந்தார். 126 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்தார்.

முகமது ஆமிர், உமர் அக்மல், உமர் குல் ஆகியோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நவீத் உல் ஹசன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் நெஹ்ரா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், ஆர்.பி. சிங், ஹர்பஜன் சிங், பதான், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா தோல்வி:

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது

0 comments:

Post a Comment