ஐசிசி விருது: தோனி உள்பட 9 இந்திய வீரர்களின் பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விருதுகளுக்கு இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 9 இந்திய வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐசிசி சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் தோனி 3 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருதின வீரர் என 3 பிரிவுகளில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கெüரமிக்க வீரர் விருதுக்கு கெüதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகிய இந்திய வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்காக இந்தியாவின் கம்பீர், ஹர்பஜன், விவிஎஸ் லஷ்மண் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒரு தின ஆட்டக்காரர் விருதுக்காக தோனியுடன், யுவராஜ்சிங், சேவாக் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

20-20 போட்டிகளில் சிறந்த முறையில் பரிமளித்தவர் விருதுக்காக இந்தியாவின் ஜாகீர்கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஹரூன் லாக்ரட் இதைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment