ஒருநாள் கிரிக்கெட் வரிசை: இந்தியா மீண்டும் 2-வது இடத்தை பிடித்தது

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்பு இந்தியா தர வரிசையில் 2-வது இடத்தில் இருந்தது. 3 ஆட்டத்திலும் வென்றால் இந்தியாவுக்கு “நம்பர் ஒன்” இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. இதனால் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது. 24 மணி நேரமே இந்த நிலை நீடித்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக தோற்றதாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெற்றதாலும் இந்திய அணி 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றதால் தர வரிசையில் மீண்டும் 2-வது இடத்தை (125 புள்ளிகள்) பிடித்தது.

தென் ஆப்பிரிக்கா 127 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்தி ரேலியா 125 புள்ளி களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் இன்னும் 3 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும்

0 comments:

Post a Comment